Monday, April 11, 2022

சோழர் கால முதல் ஆடவல்லான் சிற்பம்

சோழர் கால முதல் ஆடவல்லான் சிற்பம். சோழர் காலத்தில் ஆடவல்லான் சிற்பம் சிறியதாகவே வடித்தனர்.அவை பராந்தக சோழன் காலத்தில் எடுக்கப்பட்ட திருவாலீஸ்வரம் கோயிலில் உள்ள ஆடவல்லான் சிற்பம் பாண்டிய நாட்டு சிற்பி ஒருவனால் எடுக்கப்பட்டது.சோழநாட்டு சிற்பியால் பராந்தக சோழன் காலத்தில் கற்றளி பிச்சனால் எடுக்கப்பட்ட திருவாவடுதுறை கோயிலில் தட்சிணாமூர்த்தி மேல் தோரணத்தில் உள்ள ஆடவல்லான் சிற்பமும் சோழர் ஆட்சியில் முதல் ஆடவல்லான் சிற்பங்களாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆடல்வல்லான் செப்பு திருமேனிகள் பல இந்த சிற்பங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டன. பராந்தக சோழன்,செம்பியன் மாதேவி,இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் காலங்களில் எடுக்கப்பட்ட ஆடவல்லான் செப்பு திருமேனிகள் கண்களை கவரும் கொள்கை அழகு திருமேனிகள். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...