Monday, April 11, 2022
சோழர் கால முதல் ஆடவல்லான் சிற்பம்
சோழர் கால முதல் ஆடவல்லான் சிற்பம்.
சோழர் காலத்தில் ஆடவல்லான் சிற்பம் சிறியதாகவே வடித்தனர்.அவை பராந்தக சோழன் காலத்தில் எடுக்கப்பட்ட திருவாலீஸ்வரம் கோயிலில் உள்ள ஆடவல்லான் சிற்பம் பாண்டிய நாட்டு சிற்பி ஒருவனால் எடுக்கப்பட்டது.சோழநாட்டு சிற்பியால் பராந்தக சோழன் காலத்தில் கற்றளி பிச்சனால் எடுக்கப்பட்ட திருவாவடுதுறை கோயிலில் தட்சிணாமூர்த்தி மேல் தோரணத்தில் உள்ள ஆடவல்லான் சிற்பமும் சோழர் ஆட்சியில் முதல் ஆடவல்லான் சிற்பங்களாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆடல்வல்லான் செப்பு திருமேனிகள் பல இந்த சிற்பங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டன. பராந்தக சோழன்,செம்பியன் மாதேவி,இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் காலங்களில் எடுக்கப்பட்ட ஆடவல்லான் செப்பு திருமேனிகள் கண்களை கவரும் கொள்கை அழகு திருமேனிகள்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment