Saturday, April 29, 2023
தளவாய்புரம் செப்பேடுகள்
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகும்.ஏழு செப்பேடுகளை கொண்ட சாசனம் இது பராந்தக வீரநாரயணன் ஆறாம் ஆட்சி ஆண்டில் எழுதப்பட்டது.இதன் முத்திரையில் புலி இரண்டு மீன்கள் கீழே வில்லும் இவற்றை சுற்றி கிரந்த எழுத்தில் சுலோகம் எழுதப்பட்டுள்ளது.இந்த செப்பேட்டின் எழுத்துக்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளது.தமிழ் பகுதி வட்டெழுத்திலும் சமஸ்கிருத பகுதி கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.ஆராய்ச்சி பேரறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் இச்செப்பேட்டை படியெடுத்து புகைபடமும் எடுத்துள்ளார்.இச்சானத்தை அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி தமது சாசன செய்யுள் மஞ்சரி நூலின் மூலம் முதன் முதலில் வெளியிட்டார்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Monday, April 17, 2023
சித்திரை விஷீ தமிழ் புத்தாண்டு
இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழ ஆட்சியில் 12 ஆம் ஆண்டில் ஆற்றூர் துஞ்சினதேவர் அரிஞ்சய சோழன் தேவி ஆதித்தன் கோதை பிராட்டியார் திருவனந்தீசுரத்து பெருமானுக்கு சித்திரை விஷீ க்கு 108 கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்ய நிலம் அளித்துள்ளனர்.இந்த கல்வெட்டில் அரசிகளின் பெயர்களாக வருகின்றன.ஆதித்தன் கோதை பிராட்டியார்,திரிபுவனமாதேவி,
சோழமாதேவி,வீமன் குந்தவை ஆகும்
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Posts (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...