Sunday, February 17, 2019

கங்காள மூர்த்தி

கங்காள மூர்த்தி

சிவபெருமான் திருமாலின் ஒவ்வொரு அவதாரம் முடிவிலும் அவர் இறந்த பின்பு அவரது எலும்பு மற்றும்    ஒவ்வொரு யுகத்தின் முடிவில் இறந்த பிரம்மாவின் எலும்புகளையும் ஒரு மூட்டையாக கட்டி ஒரு குச்சியில் கட்டி அதை தன் தோளில் எடுத்து செல்வார். இவரே கங்காள மூர்த்தி ஆவார். கங்காளம் என்றால் எலும்பாகும்.

Sunday, February 10, 2019

காசிக்கு இணையான தலம் கங்கை கொண்ட சோழபுரம்

காசியில் கங்கையில் இட்ட எலுமிச்சை பழம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் சிங்க கிணற்றில் காணப்பட்டதாம்.இராஜேந்திர சோழன் காலத்திலிருந்து வாழ்ந்த அக்கால மக்கள் காசியை விட இந்த கோயிலை புனிதமாக கருதி வழிப்பட்டனர். அக்கோயில் உள்ள கல்வெட்டு

"வாறணாசியில் கெங்கைக்கரை யொறத்தி லகப்பட்டு யிருந்த எலுமிச்சபழம் சிங்க கொணத்தில் கண்டு சொழன் மனம்......ந்து தென்று பெறியோர்கள் சொல்படி கல்வெட்டு "

காசிக்கு சமமான தலம் என்பதை

"வாறணாசி சமமான மாகுமெ சொளமண்டல வா(ழி)"

என குறிக்கப்பட்டுள்ளது.கங்கை கொண்ட சோழபுரத்தில் வாழ்ந்த மக்கள் பல கோயில்களுக்கு பல அறங்களை செய்துள்ளனர்.

Saturday, February 9, 2019

அபிராமி பட்டர் அவதார இல்லம்


தை அமாவாசை அன்று சரபோஜி மன்னனிடம் தவறாக திதி பௌர்னமி என்று கூறி அன்று அபிராமி அந்தாதி பாட  அபிராமி் அம்மன் வந்து தன் தோட்டினை ஆகாயத்தில் வீசி நிலவை வர வைத்தாள் பட்டரின் வாக்கை மெய்பித்தாள்.மன்னன் மகிழ்ந்து பட்டருக்கு பல ஊர்களில் நிலங்கள் அளித்தார்.அபிராமி பட்டர் இல்லம்
 தற்போது ஓட்டல் மெஸ் ஆக இருக்கின்றது. சில வருடங்கள் முன்பு வரை நினைவு இல்லமாக இருந்தது. அபிராமி பட்டர் திருமணம் ஆகதவர்.அவரது உறவினர் சந்ததியினர் இந்த வீட்டை விற்று விட்டனர் வாங்கியவர்கள் அவர் வாழ்ந்த ஓட்டு வீட்டை இடித்து கட்டிடம் கட்டியுள்ளனர்.அபிராமி அந்தாதி பாடுபவர்களும் பட்டர் புகழ்பாடும் பெரியவர்களும் அவரது வீட்டை காப்பாற்றாமல் விட்டுவிட்டனர்.


சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...