Saturday, December 29, 2018

சிதம்பரம் புலிமடு சுடலையமர்தார் மத்யந்தனேசுவரர் கோயில்

சிதம்பரம் புலிமடு சுடலையமர்தார்





மத்யந்தனேசுவரர் கோயில்:   இக்கோயிலைக் கட்டியவர் முதற் குலோத்துங்சோழன் விக்கிரம சோழன் இவர்களின் படைத் தலைவராய் இருந்த தொண்டை மண்டலத்து மணவிற்கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவரான கூத்தர் காலிங்கராயர் ஆவர்.இங்கு புலிக்கால் (வியாக்கிரபாதர்)முனிவரின் தந்தை மத்யந்த முனிவர் வழிப்பட்ட லிங்கமாகும்.தில்லையின் எல்லையில் அமைந்த மயானத்தின் அருகேயுள்ள இக்கோயில் சுடலையமாந்தர் கோயில் என கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள புலிமடு குளம் நடராஜர் கோயிலுக்குறிய 10 தீர்த்தங்களில் ஒன்றாகும். இறந்தவர்கள் மோட்சம் பெற இந்த தீர்த்ததில் அஸ்தியை கரைப்பார்கள் இங்கு இடப்படும் எலும்புகள் குளத்தில் கரைந்து விடுகின்றன.காசிக்கு இணையான தலமாகும்.தற்போது கல்வெட்டுகள் முழுவதும் சிதைந்துள்ளன. கோயிலிலிருந்து பல கற்கள் அகற்றப்பட்டு விட்டன.நடராஜர் கோயில் கல்வெட்டில்
"தொல்லோர்வாழ் தில்லைச் சுடலை  
  யமர்ந் தார்கோயிற் கல்லா லெடுத்தமைத்தான் காசினியிற்         றொல்லை மறைவளர்க்க வெங்கலியை மாற்றிவழு வாமல்  அறம் வளர்க்கக் காலிங்கன் ஆய்ந்து" எனும் வெண்பாவின் மூலம் காலிங்கராயன் இக்கோயில் கட்டியதை அறியலாம். இறைவன்:மத்யந்தனீஸ்வரர்  இறைவி:மங்களநாயகி

Saturday, December 15, 2018

சிதம்பரம் நடராஜர் கோயில் சபையும் சாலாகார விமானமும்.



இக்கோயில் ஆதி காலத்தில் மரத்தினால் அமைந்திருந்தன. சிற்சபையும் கனக சபையும் மரக்கட்டிங்களாக இருந்தன.கனக சபை பொற்றகடு வேயப்பட்டிருந்தன. ஊர்த்துவதாண்டவ மூர்த்தி எழுந்தருளியுள்ள நிருத்த சபை முற்காலத்தில் மரக்கட்டிமாக இருந்து பின்பு அதே அமைப்பை மாற்றாமல் கருங்கல் கட்டிடமாக அமைத்தனர். இக்கட்டிடங்கள் பௌத்த விகாரையின் அமைப்பை போன்று 'சாலாகார'  விமான முள்ளனவாக இருக்கின்றன இந்த அமைப்பு பௌத்தச் சார்பானது. இதே அமைப்பைக் கொண்டதது தான் மாமல்லபுரத்தில் உள்ள 'பீம ரதம்' என்னும் சாலாகார விமானக் கட்டிடமாகும்.சிதம்பரம் கோயில் பௌத்த சார்புடையது என்பதை முதலாம் வரகுணப் பாண்டியன் காலத்தில் வாழ்ந்த மாணிக்க வாசகர் வரலாற்றில் அவர் சிதம்பரத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து வென்றார் என்றும் தோல்வியுற்ற பௌத்த பிக்குகள் சிதம்பரத்தை விட்டு இலங்கைக்கு போய்விட்டார்கள் என்றும் வரலாறு கூறுகிறது.சிதம்பரத்தில் அக்காலத்தில் பௌத்தர்கள் இருந்தார்கள் என்பதையும் அவர்களின் பௌத்த விகாரைகள் இருந்தன என்றும் தெரிகிறது. பௌத்தருடைய கட்டிடக்கலை அமைப்பு  இக்கோயிலிலும் ஏற்பட்டிருகிறது.சிதம்பரத்தில் ஜைனர்களும் இருந்துள்ளனர்.ஜைனர் தெருவும் இருந்துள்ளது.ஆனால் பௌத்தர்கள் ஆதிக்கம் தான் அப்போது அதிகமாக இருந்துள்ளது. என நா.மு.வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடுகிறார்.

Monday, December 3, 2018

பூம்புகார் சம்பாதி வனம்.

பூம்புகாரில் சம்பாதி வனம் என்பது சூரிய கிரகணத்தால் சிறையிழந்த கழுகரசனாகிய சம்பாதி தவமிருந்த வனமாகும்.
இக்காலத்தில் வைத்தீஸ்வரன் கோயில் என வழங்கும் புள்ளிருக்கு வேளூரில் முற்காலத்தில் சம்பாதி, சாடயு என்னும் கழுகரசர் இருவர் சிவபெருமானை வழிப்பட்டிருந்தனர். இவ்விருவரில் சம்பாதி என்பார் நாள்தோறும் ஒரு யோசனை(ஒன்பது மைல்) அளவு சென்று நறுமலர்களைப் பறித்துவந்து இறைவனை அருச்சித்துப் போற்றினர் என்பது புராண வரலாறு.இச்செய்தியினைக் கி.பி.7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர்
"கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடம் தள்ளாய சம்பாதி சடா என்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே"
எனவும்,
"யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே"
எனவும் வரும் திருப்பாடல்களிபற் குறித்து போற்றி யுள்ளார்கள். நான்கு குரோசம் கொண்ட தூரம் ஒரு யோசனை என்றும் ஒரு குரோசம் என்பது இரண்டேகால் மைல் என்றும் கூறுவர்.எனவே,சுமார் ஒன்பது மைல் தூரம் ஒரு யோசனை என கொள்ளலாம்.இக்கணக்கினைக் கொண்டு சிந்தித்தால் சம்பாதி என்ற பெரியார் புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானை பூசித்தற் பொருட்டு நாள்தோறும் நறுமலர்களைப் பறித்து வந்த நந்தவனம் இப்பூம்புகார் நகர  எல்லையை அடுத்து இருந்தது என்பது நன்கு விளங்கும்.அது தற்போது பெருந்தோட்டம் என வழங்கும் ஊராகும்.திருஞானசம்பந்தர் பதிகத்தில் குறித்த இக்குறிப்புக்கு பொருந்த "சம்பாதி யிருந்த வனம் சம்பாதிவனம்"இப்புகார் நகரத்தில் இருந்ததென மணிமேகலை கூறும் குறிப்பு அமைந்திருந்தல் கணலாம் என சதாசிவப்பண்டாரத்தார் கூறுகிறார்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...