Wednesday, January 22, 2020

திருத்துருத்தி சொன்னவாறறிவார் திருக்கோயில் குத்தாலம்

இக்கோயில் இராஜராஜ சோழனின் 7ஆம் ஆண்டு ஆட்சியில் செம்பியன் மாதேவியால் புதிப்பித்து கட்டப்பட்டதாகும்.பரதமாமுவனிவர் மகளாக பிறந்த பார்வதி இறைவனை திருமணம் செய்ய சிவலிங்க பூசை செய்து தவம் செய்தார்.பின்பு இறைவன் வந்து இறைவியின் கரத்தைப்பற்றினார். இறைவன் பாதங்களில் வீழ்ந்த  பார்வதி இறைவா என் தாய் தந்தையிடம் அனுமதி பெற்று என்னை முறைபடி திருமணம் செய்யுங்கள் என வேண்டினாள். இறைவன் விதிமுறை வகுத்த நாமே பிழைத்தல் கூடாது அவ்வாறே நடத்திக் காட்டுவோம் என்றார்.அவ்வாறு திருமணம் நடைபெற்றது.இதனால் இறைவன் சொன்னவாறறிவார் அழைக்கப்படுகிறார். திருமணம் நடந்த அடையலமாக இறைவன் கைலாத்திலிருந்து எடுத்து வந்த உத்தால மரத்தையும் அவர் பாதுகைகளையும் இங்கு விட்டு சென்றுள்ளார்.அப்பர்,சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம்.
கல்வெட்டுகளில் இறைவன் சொன்னவாறறிவார், வீங்குநீர்துருத்தி கற்றளியுடைய மகாதேவர் என அழைக்கப்படுகிறார்.இறைவியின் திருப்பெயர் அரும்பன்ன வனமுலையார்,நறுஞ்சாந்திள முலையம்மை என அழைக்கப்படுகிறார்.இங்கு நடராஜ பெருமானை வழிபடும் ஒரு சிற்பம் உள்ளது அது கண்டராதித்த சோழனாக இருக்கலாம்.

இராஜேந்திர சோழன் 5 ஆம் ஆண்டில் அவனது படைகள் வெற்றி அடைய சைவர்களுக்கு உணவளிக்க நிலம் அளிக்கபபட்டது.

இராஜேந்திர சோழனின் 23 ஆம் ஆண்டில் இராசேந்திரசோழவள நாட்டு திருக்கழுமலநாட்டு வீரவவசோழ நல்லூரில் சிவதன்மசேகரனான பரமபத்மனால் தன் அரசன் இராஜேந்திர சோழனுக்கு தீமை விலகி நன்மை உண்டாக திருக்கற்றிளியுடைய மகாதேவர்க்கு உச்சிபொழுது பணிபுரியும் சிவயோகியர் உணவுக்காக நிலம் அளித்துள்ளான்.

இராஜேந்திர சோழனின் 5 ஆம் ஆண்டில் 35 நாள்  திருத்துருத்தி சொன்னவாறறியுடைய மகாதேவர்க்கு நிலமளித்து சில கிராமங்களிலிருந்து ஆண்டொன்றுக்கு 80 காசுவீதம் அரசன் இராஜேந்திர சோழன் பிறந்தநாளகிய மார்கழித் திருவாதிரையில் விழாக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.

இரண்டாம் இராஜேந்திரன் 9 ஆம் ஆண்டில் கங்கை கொண்ட சோழபுரத்து வியாபாரி வெண்காடன் ஆடவல்லான் என்பான் 2ஆம் இராஜேந்திர சோழனுக்கு நன்மை உண்டாகவும்  சொன்னவாறறிவார் கோயிலில் உச்சிபொழுது வழிபாட்டிற்கும் மகேஸ்வரர்களுக்கு உணவளிக்கவும் நிலமும்,பொன்னும் அளித்தான்.
மேலும் இங்கு விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன்,கிருஷ்ணா தேவராயர் கால கல்வெட்டுகள் உள்ளன.

Monday, January 13, 2020

கொற்கை கண்ணகி கோயில்

பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்த பின்பு கொற்கையில் இளவரசானாக இருந்து ஆட்சி செய்த வேற்றிவேற் செழியன் பாண்டிய நாட்டை அரசாளும் உரிமை அடைந்தான்.சேரன் செங்குட்டுவன் பத்தினிக்கு படிமம் எடுக்க இமயம் சென்ற போது.மதுரையில்  வெற்றிவேற் செழியன் முடி சூடி கொண்டு ஆட்சி செய்தான். கண்ணகி சாபத்தால் பாண்டிய நாடு மழைவளம் இல்லாமல் வரண்டது.  கண்ணகியின் சினம் தணிக்க கொற்கையில் வெற்றிவேற் செழியன் கண்ணகிக்கு கோயில் எடுபித்து ஆயிரம் பொற் கொல்லர்களை பலி கொடுத்து பெருவிழா நடத்தினான். இதனால் கண்ணகி சினம் தணியவே பாண்டிய நாடு  நன்னிலை அடைந்தது. வெற்றிவேற் செழியன் ஒருமுலை குறைத்த திருமாபத்தினிக்கு ஆயிரம் பொற்கொல்லரை பலி கொடுத்தான் என்பது சாத்தியம் அல்ல கல்வெட்டுகளில் ஆயிரம் கற்றளி எனும் பெயர் வருகிறது அதனால் அவன் ஆயிரம் கற்றளிகளை எடுத்தவன் என பொருள் அல்ல அது அவன் பெயர்.அதே போல ஆயிரவன் பொற்கொல்லன் என்பவன் கண்ணகி கோயிலுக்கு தானே முன்வந்து மன்னர் முன்பு தன்னை பலி கொடுத்து கொண்டிருப்பான்.பின்பு அவை வெற்றிவேற் செழியன் கண்ணகி கோயில் கட்டி ஆயிரம்பொற் கொல்லரை பலி கொடுத்தான் என செய்தியாக மாறி இருக்கலாம். இக்கோயிலில் இருந்த கண்ணகி சிலை காணாமல் போய்விட்டது. தற்பொழுது காளியம்மன் சிலை உள்ளது.இங்கு இருந்த கண்ணகியின் பெயர் செழுகை நங்கை என அழைக்கப்பட்டது. இக்கோயில் பாண்டியன் வெற்றிவேல் செழியன் கட்டியதால் கண்ணகி செழிய நங்கை என அழைக்கப்படாள் பின்பு அவை செழுகை நங்கை என பெயர் மாற்றம் அடைந்தாள். தற்பொழுது வெற்றிவேல் அம்மன் கோயில் என அழைக்கப்படுகிறது.இவ்வூரில் உள்ள பழையான சிவன் கோயில் உள்ளது. அவை 'அக்கசாலை ஈசுவர முடையார் கோயில்' என கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. கொற்கை என்பது கல்வெட்டுகளில் மதுரோதயநல்லூர் என குறிக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் தலைநகர் மதுரை துறைமுகம் கொற்கையால் செல்வ செழிப்பு பெற்றதால் கொற்கை மதுரோதயநல்லூர் என அழைக்கப்பட்டதாம். இங்கு பல நூற்றாண்டுகளாக புகழ் பெற்ற வன்னிமரம் உள்ளது.பொற்கை பாண்டியன் ஆட்சி செய்ததால் இவ்வூர் பொற்கை என அழைக்கப்பட்டு பின்பு கொற்கை ஆனது எனவும் கூறுகின்றனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Friday, January 3, 2020

திருவெண்காடு ஆடவல்லான்

திருவெண்காடு கோயிலில் இராஜராஜ சோழன் காலத்தில் எடுக்கப்பட்ட நடராஜர் திருமேனி இவர் தூய தமிழ் பெயரில் ஆடவல்லான் என்றே அழைக்கப்படுகிறார். இராஜராஜ சோழன் மனைவி கூத்தன் வீரநாராயணி  என்பவள் இராஜராஜ சோழன் 28 ஆம் ஆண்டு (1013)  இந்த ஆடல்வல்லான் திருமேனிக்கு  வழிபாட்டிற்கு பொன் அளித்துள்ளார்.இரா.விக்ரமன்,சிிதம்பரம்

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...