Wednesday, October 2, 2019

மதுராபதி தெய்வம்

மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன்பு ஆட்சி செய்த பாண்டியர்களின் பெருமைகளை அத்தெய்வம் கூறியது.மதுரபதியின் உருவம் தவளவால் முகத்தி சடையில் பிறயை அணிந்தவள் குவளை மலர் போன்ற மை பூசிய கண்களை உடையவள் பவளம் போல் வாயினை உடையவள் வெள்ளிய ஒளி போன்ற முகத்தினை உடையவள். இடப்பக்கம் நீல நிறத்தையும் வலப்பக்கம்  பொன் நிறத்தையும் பெற்றிருந்தாள் வலது காலில் வீர கழலும் இடது காலில் சிலம்பினை அணிந்திருந்தாள். வலக்கையில் சுடர் கொடுவாளையும் இடக்கையில் தாமரை மலரையும் ஏந்தியிருந்தாள். இடப்பக்கம் நீல நிறத்தையும் வலப்பக்கம் பொன் நிறத்தையும் பெற்றிருப்பதால் பார்வதி சிவபெருமானிடம் இடபாகத்தை பெற்றதால் இந்த உருவம் அர்த்தநாரி போலவே இருந்தன.பின்னாளில் இந்த  தெய்வமே மீனாட்சி சோமசுந்தர கடவுளாக கொள்ளப்பட்ட தாக கூறுகின்றனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.


1 comment:

  1. இது சிவப்பு நிறம்.....பொன் நிறம் அல்ல

    ReplyDelete

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...