Friday, July 9, 2021
தில்லை திருக்கைக் கோட்டி மண்டபம்
தில்லைப் பெருங்கோயிலில் மணவிற் கூத்த காலிங்கராயன் பல திருப்பணிகள் செய்து தேவாரத் திருமுறைகளை செப்பேட்டில் எழுதி சிற்றம்பலத்தில் வைத்து அவற்றை தினமும் ஓத நடராஜர் சன்னதியின் முன்பு மண்டபம் கட்டி அதில் தேவார மூவரை எழுந்தருளவித்தான்.தேவார திருமுறை மண்டபங்கள் திருக்கை கோட்டி என அழைக்கப்பட்டது.பின்பு அந்த மண்டபம் தேவமகாராயர் ஆட்சியில் அவருடைய பிரதிநிதியாக செஞ்சியில் ஆட்சி செய்த வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் கி.பி.1579-இல் பழைய இடத்திலிருந்து பெருமாளை எடுத்து நடராஜர் சன்னதி சபை வாசலிலேயே பெருமாளுக்கு தனி சன்னதி அமைத்தான். அம்மண்டபம் பெருமாள் கோவிலின் முகமண்டபம் ஆகிவிட்டது.பின்பு அந்த மண்டபம் செட்டியார்களால் புதுப்பிக்கப்பட்டது . தேவார மூவரின் சிலைகள் தற்போது நவகிரகத்தின் அருகில் உள்ளது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Posts (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
தில்லையில் புலிக்கால் முனிவரும், ஆதிசேஷன் எனும் பதஞ்சலி முனிவரும் தவம் செய்து நடராஜர் சிவகாம சுந்தரி திருநடன காட்சியை கண்டனர். இமயமலைக்கு த...
-
மதுரையில் கோவலன் கள்வன் என பழியை சுமத்தி கொல்லப்பட்ட செய்தி கேட்ட கண்ணகி கொதித்தெழுந்தாள் அவள் வானத்தை நோக்கி காய்கதிர் செல்வனே என் கணவன் க...

