Tuesday, February 15, 2022
எதிரிலி சோழன் சிவபாதசேகரன் சித்தத்துணை பெருமாள் விழா
இரண்டாம் குலோத்துங்க சோழன் தில்லை அம்பலவாணன் கோயிலில் எதிரிலிசோழன் சிவப்பாதசேகரன் சித்தத்துணை பெருமாள் விழா என்ற விழாவை ஏற்பாடு செய்துள்ளான்.
தன்குல முன்னோன இராஜராஜ சோழன் முதல் சோழர்க்கு நடராஜர் பெருமான் சித்தத்துணையாக இருந்து வந்ததாலே இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ளான்.மேலும் அம்பலவாணர் குலோத்துங்க சோழன் திருத்தோப்புக்கு எழுந்தருளும் எதிரிலி சோழன் சிவபாதசேகரன் சித்தத்துணை பெருமாள் விழாவில் எதிரிலிசோழன் சிவபாதசேகரன் சித்தத்துணை பெருமாள் நந்தவனத்திற்கு எழுந்தருளி திருப்பாலிகை வலஞ்செய்து எழுதருளுளினார்.இராஜராஜ சோழன் ஆடவல்லான் மீது அதிக பக்தியும் அன்பும் கொண்டவன் தஞ்சை பெரிய கோவிலில் ஆடவல்லான் திருமேனி அளித்தும் அங்கு ஓவியத்தில் தான் ஆடவல்லானை வணங்குவது போல வரைந்துள்ளான் மேலும் மரக்கால்,நிறைகல்,துலாக்கோல் ஆகியவற்றிற்கு ஆடவல்லான் என பெயரிட்டுள்ளான்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...
No comments:
Post a Comment