Tuesday, February 15, 2022

எதிரிலி சோழன் சிவபாதசேகரன் சித்தத்துணை பெருமாள் விழா

இரண்டாம் குலோத்துங்க சோழன் தில்லை அம்பலவாணன் கோயிலில் எதிரிலிசோழன் சிவப்பாதசேகரன் சித்தத்துணை பெருமாள் விழா என்ற விழாவை ஏற்பாடு செய்துள்ளான். தன்குல முன்னோன இராஜராஜ சோழன் முதல் சோழர்க்கு நடராஜர் பெருமான் சித்தத்துணையாக இருந்து வந்ததாலே இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ளான்.மேலும் அம்பலவாணர் குலோத்துங்க சோழன் திருத்தோப்புக்கு எழுந்தருளும் எதிரிலி சோழன் சிவபாதசேகரன் சித்தத்துணை பெருமாள் விழாவில் எதிரிலிசோழன் சிவபாதசேகரன் சித்தத்துணை பெருமாள் நந்தவனத்திற்கு எழுந்தருளி திருப்பாலிகை வலஞ்செய்து எழுதருளுளினார்.இராஜராஜ சோழன் ஆடவல்லான் மீது அதிக பக்தியும் அன்பும் கொண்டவன் தஞ்சை பெரிய கோவிலில் ஆடவல்லான் திருமேனி அளித்தும் அங்கு ஓவியத்தில் தான் ஆடவல்லானை வணங்குவது போல வரைந்துள்ளான் மேலும் மரக்கால்,நிறைகல்,துலாக்கோல் ஆகியவற்றிற்கு ஆடவல்லான் என பெயரிட்டுள்ளான். இரா.விக்ரமன்,சிதம்பரம்

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...