Tuesday, October 6, 2020

சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு கோபுரம்

இக்கோபுரம் பாண்டியர்களால் தொடங்கப்பட்டு முதலாம் கோப்பெருஞ்சிங்கனால் கட்டி முடிக்கப்பட்டது."கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு ஐந்தாவது தனியூர் பெரும்பற்றப்புலியூர் உடையார் திருச்சிற்றம்பல முடையார்க்கு அழகிய சீயன் அவனி ஆளப்பிறந்தான் காடவன் கோப்பெருஞ்சிங்கனேன் இந்நாயனார்கோயில் தெற்கு திருவாசலில் சொக்கசீயன் திருநிலை எழு கோபுரமாகச் செய்த திருப்பணிக்கு உடலாக" இக்கோயில் திருப்பணிக்கு உடலாக ஜயங்கொண்ட சோழமண்டலத்து ஊற்றுகாட்டுக் கோட்டடத்து ஆற்றூரான ராஜராஜநல்லூரில் 301 3/4 வேலி நிலம் இம்மன்னனால் கொடுக்கப்பட்டது. (விக்ரமன்,சிதம்பரம்)

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...