Tuesday, July 21, 2020

தேவசேனாதிபதி முருகன் திருமேனி கங்கை கொண்ட சோழபுரம்

தேவசேனாதிபதி முருகன் திருமேனி.
போர் கோலம் கொண்ட இந்த தேவசேனாதிபதி திருமேனி இராஜேந்திர சோழன் எனும் வீர சேனாதிபதி போர் வீரனாகவும், சேனைகளின் தலைவனாகவும் இருந்து பல நாடுகளை வென்று பல மன்னர்களை வென்றதன் நினைவாக இராஜேந்திர சோழன் இந்த திருமேனியை எடுத்துள்ளான்.இந்த திருமேனி கி.பி.1035 ஆம் ஆண்டு செய்தளிக்கப் பட்டதாக கூறுகின்றனர்.
இந்த திருமேனி தலையில் சீரிடா மகுடம் தரித்து காதுகளில் மகர குண்டலங்கள் அணிந்து,கழுத்தில் முத்து வடங்களை அணிந்து. திருக்கரங்களில் நான்கில் வலது மேல் கையில் சக்தி வேல்படையும்,இடது மேல் கையில் குக்குடமும் (சேவல்)கீழ் வலக்கையில் வாள் இருந்துள்ளது. இடது கீழ் கையில் கேடயம் உள்ளது.
குமரன் எனும் தேவசேனாதிபதியின் இளமை தோற்றம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...