Friday, October 9, 2020
சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரம்
இரண்டாம் குலோத்துங்க சோழனால் தொடங்கப்பட்ட இக்கோபுரம் இரண்டாம் கோப்பெருங்சிங்கனால் முற்றிலும் புதுப்பித்துக் கட்டப்பட்டது. 1.அவனியாளப் பிறந்தான் காவேரி பாயும் நாட்டை வென்றதனால் சம்பாதிக்கப்பட்ட பொருள்களால் கனக சபைக்குக் கிழக்கே மேருமலை போன்றதும்,தேவர் கூட்டங்களுடைய மகுடங்களோடு இடறக் கூடியதுமாகிய கோபுரத்தைத் தன் பெயரில் சிறிது காலத்தில் எடுப்பித்தான். 2.கட்க மல்லனாகிய அரசன் ஏழு சமுத்திரங்களையுடைய அலைகளையும் கடக்கூடிய திறமையுடைய புகழை உடையவன். அவன் ஏழு தீவுகளை வென்று ஈட்டிய பொருளால் ஏழு உலகங்களுக்கு நலன் தரக்கூடிய ஆதி நடேசனான நடராஜனுக்கு,நட்சத்திர கூட்டங்களை இடிக்கக் கூடிய,அன்பர்கள் விருப்பத்தை பூர்த்திசெய்யும் ஸ்ரீ கோபுரத்தை எடுப்பித்தான். 3.நடராசனும்,சபையிலுள்ள எல்லாத் தேவர்களும் நிரம்பியிருப்பதான காட்சியை கோபுரத்தை அவனியாளப் பிறந்தானும் நற்குணங்களுக்கு இருப்பிடமானவனும் ஆகிய காடவ குல மன்னன் ஏழு உலகங்களையும் மக்கள் கண்முன் கொண்டு வருவதற்காகவோ ஏழுநிலை அடுக்குகளை உடைய கோபுரத்தைச் சுத்தமான தன்புகழால் எடுப்பித்தான். 4.கிழக்கு திக்கிலுள்ள அரசர்களை வென்று அவர்கள் கொடுத்த பொன்னை துலாபாரம் செய்து, நிச்சங்கமல்லன்,பார்வதி சமேதராக இருக்கும் நடேசன் நித்யமான சபையின் கிழக்கு பக்கத்தில் கீழை கோபுரக் கீழ் பகுதியைச் சூரியன் முறிந்து விழுந்து போன்று ஒளி மிக்கதாக நிர்மாணித்தான்.இன்னும் பல கல்வெட்டுகள் இவன் இந்த கோபுரத்தை கட்டியதை கூறுகின்றது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
தில்லையில் புலிக்கால் முனிவரும், ஆதிசேஷன் எனும் பதஞ்சலி முனிவரும் தவம் செய்து நடராஜர் சிவகாம சுந்தரி திருநடன காட்சியை கண்டனர். இமயமலைக்கு த...
-
மதுரையில் கோவலன் கள்வன் என பழியை சுமத்தி கொல்லப்பட்ட செய்தி கேட்ட கண்ணகி கொதித்தெழுந்தாள் அவள் வானத்தை நோக்கி காய்கதிர் செல்வனே என் கணவன் க...

No comments:
Post a Comment