Monday, July 13, 2020

இராஜேந்திர சோழ விண்ணகரம்.

இராஜேந்திர சோழனுக்கு திறை செலுத்தும் சிற்றரரசனாக இருந்த சேர அரசன் இராசசிங்கன் பாண்டிய நாட்டில் மன்னார் கோயிலில் ஒரு விண்ணகரம் எடுப்பித்து அதற்கு இராஜேந்திர சோழ விண்ணகரம் என பெயரிட்டான்.தற்போது இராஜகோபால சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. இராஜேந்திர சோழன் 24 ஆம் ஆண்டு ஆட்சியில் இக்கோயிலுக்கு தேவதானமாக நிலம் அளித்தான்.அதை இவன் மகன் ஜடாவர்மன் சுந்தரசோழ பாண்டியனுடைய பதினைந்தாம் ஆட்சி ஆண்டிலிருந்து அனுபவிக்கப்பட வேண்டும் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. சடையவர்மன் சுந்தரசோழப் பாண்டியன் பல திருப்பணிகள் செய்து நிவந்தம் அளித்துள்ளான்.மாறவர்மன் சுந்தர பாண்டியன் திருப்பணி செய்து நிவந்தம் அளித்துள்ளான்.நாயக்க மன்னர்கள் காலங்களிலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளன.குலசேகர ஆழ்வார் இங்கு முக்தியடைந்தார். நாலாயிரதிவ்யபிரபந்திற்கு பன்னிரெண்டு ஆயிரப்படி உரை எழுதிய அழகிய மணவாள ஜீயர் அவதார திருக்கோயிலாகும்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...