Saturday, May 23, 2020

ஒலோகமாதேவியார் இரண்யகருப்ப தானம் திருவியலூர்க் கோயில்

இராஜராஜ சோழன் 29 ஆம் ஆண்டு கி.பி.1014 இல் திருவியலூர்க் கோயிலில் துலாபாரம் புகுந்தான் அப்போது அவன் பட்டத்தரசி தந்திசக்தி விடங்கியரான ஒலோகமாதேவியார் இரண்யகருப்பம் புகுந்தார்.
துலாபாரம் தானம் என்பது புதிதாக மண்டபம் அமைத்து அரசன் துலாக்கோலில் அமர்ந்து எடைக்கு எடை தங்கம் வைத்து அதை பிராமணர்களுக்கும் கோயிலுக்கும் தானம் அளித்தல் இது ஆண்கள் மட்டுமே செய்கின்ற தானம் துலாபுருஷானதானம் எனப்படும்.
இரண்யகருப்பம் தானம் என்பது தங்கத்தால் பசுமாடு செய்து அதன் வயிற்றில் புகுந்து வெளியில் வந்து அந்த மாட்டையும் நிலத்தையும் பிராமணர்களுக்கு தானம் வழங்க வேண்டும்." ஸ்ரீ கோவிராஜ கேசரி பன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு  29 ஆவது இராஜேந்திர சிங்கவளநாட்டு மண்ணிநாட்டு பிரம்மதேயம் வேப்பற்றூரகிய சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து மகா சபையோம் கையெழுத்து நம்மையுடைய சக்கரவர்த்தி உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் இவ்வூர் திருவிசலூர்  மகாதேவர் ஸ்ரீ கோயிலிலே துலாபாரம் புக்கருளின அன்று நம்பிராட்டியார் தந்திசத்தி விடங்கியார் இரண்யகருப்பம் புக்கருளி இத்திருவிசலூர் மகாதேவர்க்கு அக்காரவடிசில் அமுதுக்கு வேண்டும் நிபந்தகளுக்காக வைச்ச காசு" என கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...