Friday, May 22, 2020

அரிஞ்சிகை ஈச்சுரம் மேல்பாடி

இராஜராஜ சோழன் தனது 29 ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி.1014 இல் தொண்டை மண்டலமான ஜெய கொண்ட சோழமண்டலத்தில் மேற்பாடியாகிய இராசாச்ரயபுரத்தில் தேவதானமாக இறையிலியாக அந்நகரத்தாரிடம் இருந்து நிலம் வாங்கி தன் பாட்டன் அரியஞ்சய சோழனுக்கு திருஅரிஞ்சிகையிச்சுரம் எனும் பள்ளிப்படை கோயிலை எடுப்பித்தான்.
"ஸ்ரீ கோவி ராஜகேசரி பன்மரான ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு 29 ஆவது  ஜயகொண்ட சோழ மண்டலத்து பெரும்பாணப்பாடித் தூஞாட்டு மேற்பாடியாகிய ராசாச்ரயபுரத்து நகரத்தோம் ஆற்றூர்த்துஞ்சின தேவர்க்கு பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் எங்கள் நகரத்திலெடுபித்தருளின திரு அரிஞ்கைஈச்வரத்து மாகதேவர் ஸ்ரீ கோயிலுக்குத் திருச்சுற்றாலைக்குத் திருமுற்றத்திற்குத் திருநந்த வனத்துக்கும் மடவிளாகத்துக்குமாக நாங்களித் தேவர்ற்குக் கொடுத்த நிலத்துக்கெல்லை"

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...