Wednesday, May 27, 2020

இராஜராஜ சோழன் கட்டிய திருப்புகலூர் கோயில்

அக்னிபகவான் வழிபட்டதால் அக்னிபுரிஸ்வரர் என இறைவன் அழைக்கப்படுகிறார்.இறைவி கருந்தாழ்குழலி.திருநாவுக்கரசர் உழவாரப் பணி செய்து முக்தி பெற்ற தலம்.சுந்தரருக்கு செங்கல்லை பொன்கற்களாக இறைவன் மாற்றிய தலம்.முருகநாயனார் அவதாரம் செய்த கோயில்.திருஞானசம்பந்தர் பாடல்ப்பெற்ற தலம்.இக்கோயில் பழையான கல்வெட்டுகள் இராஜராஜ சோழன் கல்வெட்டே ஆகும்.செங்கல் கோயிலாக இருந்த கோயிலை இராஜராஜ சோழன் கருங்கல் கோயிலாக மாற்றியிருக்கலாம் என கூறுகின்றர்.இதன் தெற்கு திருவாயிலுக்கு இராஜராஜன் வாயில் என்று பெயர்.இவ்வூர் ராஜராஜன் காலத்தில் சத்திரியசிகாமணி வளநாடு,மும்முடி சோழ வளநாடு பனையூர் நாட்டு பிரம்மதேயமான புகலூர் என அழைக்கப்பட்டது. இக்கோயில் அர்த்த மண்டபத்தை கட்டியவன் இறையூர் உடையான் கங்கைகொண்டானான சோழ விச்சாதரப் பல்லவரையன். நீராழி மண்டபத்தை திருப்பணி செய்தவன் ஆர்க்காடு கிழான் சேதிராயன் ஆவான்.நரலோக வீரன் மண்டபம் ஒன்று இருந்தது.அதில் சத்திரியநாத சதுர்வேதிமங்கலத்தார் கூட்டம் கூடினர்.மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அகழி தோண்டப்பட்டது.ராசாக்கள் தம்பிரான் வீதி ஓன்று இவன் பெயரில் இருந்தது.இவ்வூரில் முடிகொண்ட சோழப் பேராற்றின் வடகரையில் ஒரு மருத்துவமனை இருந்தது.இங்கு உள்ள நோயாளிகளுக்கு தினமும் உணவு அளிப்பதற்கு இராசநாரயண வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு தேவூரில் முதல் குலோத்துங்க சோழன் நிலம் விட்டுருந்தான்.
திருமேனிகள்.
முதல் இராஜேந்திர சோழன் 11 ஆம் ஆண்டு ஆட்சியில் தேவன் பட்டகன் பண்டாரமும் சிவபாதசேகரத் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளத்தைச் சேர்ந்த அவரது மகள்களும் சூரியதேவரையும் அவர் இரண்டு பிராட்டியாரையும் இக்கோயிலில் எழுந்தருளவித்தனர். முதல் இராஜாதிராஜ 32 ஆம் ஆண்டு ஆட்சியில் இக்கோயிலில் சிவபுரத்துத் தேவரை எழுந்தருளவித்தனர். இரண்டாம் இராஜராஜன் 5 ஆம் ஆண்டு இராசராச மங்கலத்தரையர் இடபவாகன தேவரையும்,இராஜராஜ விடங்கரையும் இக்கோயிலில் எழுந்தருளவித்தனர்.
இங்கு முருநாயனார் திருமடம் ஒன்று இருந்தது.சேரமான் குகை ஒன்றும் இருந்தது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...