Sunday, May 17, 2020

சோழ மன்னர்கள் தில்லையில் முடி சூடுதல்

சோழ மன்னர்கள் தில்லை நடராஜ பெருமானை தம் குல தெய்வமாக கொண்டு வழிப்பட்டு இங்கு முடி சூட்டி கொண்டனர்.இக்கோயிலில் சிற்றம்பலத்தை பலமுறை பொன்வேய்ந்து பல திருப்பணிகள் செய்துள்ளனர்.இவ்வூரில் அரண்மனை அமைத்தும் தங்கி இருந்தனர்.நடராஜ பெருமான் தங்கள் குல தெய்வம் என்பதனை விக்கிரம சோழனின் திருமழப்பாடி கல்வெட்டு "தன்குல நாயகன் தாண்டவம் பயிலும் செம்பொன் அம்பலஞ்சூழ் திருமாளிகையும்" என குறிப்பிடுகிறது.இரண்டாம் குலோத்துங்க சோழன் இங்கு முடி சூட்டி கொண்டதை திருமாணிகுழி கல்வெட்டு "ஸ்ரீ இராச கேசரிபன்மரான திருபுவனச் சக்கரவர்த்திகள் தில்லைத் திருநகர் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய ஸ்ரீகுலோத்துங்க சோழர்தேவர்க்கு யாண்டு எட்டாவது" எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...