Monday, March 30, 2020

மணவிற் கூத்தன் காலிங்கராயன் சமூகப்பணி

முதல் குலோத்துங்க சோழன்,விக்கிரம சோழன்,இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் காலங்களில் படைத்தலைவராய் விளங்கிய அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன் காலிங்கராயன் தில்லையிலும், திருவதிகையிலும் செய்த பெரும் திருப்பணி ஒன்ற,இரண்டா என எண்ணி கூற முடியாது தில்லையில்  திருக்காமக்கோட்டம் எனும் சிவகாமி அம்மன் கோயிலில் திருப்பணி செய்து இந்த அம்மன் சன்னதியில் தினமும் தில்லை வாழ் குழந்தைகள் அனைவருக்கும் எண்ணெய்யும் பாலூம் வழங்கிட ஏற்பாடு செய்தான்.
நடராஜர் கோயில் அவனது கல்வெட்டு வெண்பா
'செல்வி (திருத்தறங்க டென்)னகரித் தில்லைக்கே நல்லமகப் பாலெண்ணெய் நாடோறுஞ்-செல்லத்தான் கண்டா னரும்பையர்கோன் கண்ணகனீர் ஞாலமெலாம் கொண்டானந் தொண்டையர் கோன்' என குறிக்கப்பட்டுள்ளது.
தி.வை.சதாசிவப்பண்டாரத்தார் பிற்கால சோழர் வரலாறு.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...