Saturday, December 21, 2019

செம்பியன் மாதேவி கட்டிய திருவேள்விக்குடி திருக்கோயில்

இத்திருக்கோவில் பராந்தகசோழன் காலத்தில் எடுக்கப்பட்டு செம்பியன் மாதேவி காலத்தில் முற்றிலும் புதுப்ப்பிக்கப்பட்டது.சிவபெருமான் பார்வதி திருமணத்திற்கு இங்கு யாகம் நடைப்பெற்றதால் திருவேள்விகுடி என அழைக்கப்பட்டது. இறைவன் கல்யாண்சுந்தரேசுர் என அழைக்கப்படுகிறார். திருஞானசம்பந்தர்,சுந்தரரால் பாடல் பெற்ற தலம்.கண்டராதித்த சோழன் சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் உள்ளது. கல்வெட்டுகளில் இறைவன் திருப்பெயர் திருவேள்விக்குடி உடையார், மணவாள நம்பி என்னும் பெயர்கள் கூறுப்படுகிறது.
அம்மன் திருப்பெயர்: திருக்காமக்கோட்டமுடைய பெரியநாச்சியார், நாறு சாந்து இளமுலை நாச்சியார் என்னும் திருப்பெயரால் அழைக்கப்பட்டது. நாறு சாந்து இளமுலை அரிவையர் என்றும் திருஞானசம்பந்தர் பாடலில்  கூறப்படுகிறது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.



No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...