Saturday, August 31, 2019

உடையார் குடி அனந்தீசுவரன் கோயில்

பராந்தக சோழனால் எடுக்கப்பட்ட கோயில்.கல்வெட்டுகளில் வீரநாரயண சதுர்வேதி மங்கலத்து அனந்தீசுவர உடையார் என அழைக்கப்படுகிறார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில். கண்டராதித்த சோழன் செம்பியன் மாதேவிக்கு இக்கோயிலில் தான் திருமணம் நடைப்பெற்றதாம். இராஜராஜ சோழன் தன் அண்ணன் ஆதித்த கரிகாலனை கொன்றவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. முதல் இராஜேந்திர சோழன் இந்த அனந்தீசுவர பெருமானை 'நம் மூல தெய்வம்' என குறித்துள்ளான். அதாவது இந்த அனந்தீசுவர பெருமானை தம் குல தெய்வமாக வழிபட்டுள்ளான். பெரிய குந்தவையார் சூரிய தேவன் செப்பு திருமேனி செய்ய பொன் அளித்துள்ளார்.இராஜேந்திர சோழன் மனைவி திரிபுவன மாதேவி சந்திர சேகரரும் அவர் பிராட்டியார் திருமேனியை அளித்துள்ளார்.சோழ மன்னர்கள் நிவந்தம் அளித்த கல்வெட்டுகள். செம்பியன் மாதேவி அளித்த நிவந்த கல்வெட்டும் அதில் கண்டாரதித்த சோழன் 'மேற்கெழுந்தருளிய தேவர்' என குறிக்கப்படுகிறார்.உத்தம சோழன் கல்வெட்டும்.அரிஞ்சய சோழன் மனைவிகள் வீமன் குந்தவை,ஆதித்த கோதைப்பிராட்டி நிவந்தம் அளித்த கல்வெட்டும். இரண்டாம் ஆதித்த கரிகால சோழன் கால கல்வெட்டும் அதில் அரையன் ஜயவிடங்கன் என்பவன் மூலத்தானம் தெற்கே கூத்த பெருமான் சன்னதியும்,கணபதி சன்னதியும் கட்டுவித்த செய்தியை கூறுகிறது. முதல் பராந்தக சோழனால் 'நம் மகனார்' என்று பராட்டப்பட்ட தென்னவன் விழுப்பரையனால் கட்டப்பட்ட மண்டபத்தில் ஊர் சபையினர் கூடினார்களாம்.உத்தம சோழன் காலத்தில் பழுவேட்டரையர் கண்டனர் தம்பிலி தர்மன் விளகெரிக்க  நிவந்தம் அளித்துள்ளார். பழுவேட்டரையன் கண்டன் சுந்தர சோழன் என்பான் தன் தம்பி கண்டன் சத்ரு பயங்கரன் ஆன்மா சாந்தி அடைய விளக்கெரிக்க நிலம் அளித்துள்ளான்.
இரா.விக்ரமன், சிதம்பரம்.
சான்றுகள்:S.I.I.NO.529-627
முற்கால சோழர் கலையும் சிற்பமும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...