Monday, August 19, 2019

திருக்குருக்காவூர் வெள்ளடை நாதர் கோயில்.

திருஞானசம்பந்தர் சமணர்களை கழுவேற்ற காரணமாக இருந்ததால் தன் பாவங்களை போக்க காசி சென்று கங்கையில் மூழ்க அனுமதி தர சீர்காழி பெருமானை வேண்ட சிவபெருமான் திருக்குருக்காவூர் செல் அங்கு உள்ள கிணற்றில் கங்கையை வர செய்கிறேன் அதில் உன் பாவங்களை போக்கிக்கொள் என்றார்.அதன்படியே இங்கு கிணற்றில் கங்கை பொங்கியது அதில் குளித்து பாவங்களை போக்கினார்.இன்றும் தை அமாவாசை அன்று மட்டும் அந்த கிணறு திறந்து அனைவரும் நீராடுகின்றனர்.இந்த கிணற்று நீர் அன்று பால் நிறமாக மாறுகிறதாம்.சுந்தரர் ஒரு நாள் தன் அடியார்களுடன் இங்கு வரும்போது அனைவரும் பசி தாகத்தால் வாட சிவபெருமான் அந்தணர் உருவில் வந்து தண்ணீர் பந்தல் அமைத்து அனைவருக்கும் நீர் அன்னம் வழங்கினார்.பின்பு அனைவரும் உறங்கிய பின்னர் பந்தலோடு மறைந்தார்.கண் விழித்த சுந்தரர் இறைவன் வந்து கருணை காட்டியதை அறிந்து பதிகம் பாடி போற்றினார்.கல்வெட்டுகளில் இறைவன் குருக்காவூர் வெள்ளடை மகாதேவர்,வெள்ளடை ஆண்டார், வெள்ளடையப்பர் என அழைக்கப்படுகிறார். இறைவி:காவியங்கண்ணி
முதல் இராஜேந்திர சோழன், முதற்குலோத்துங்கன், விக்கிரம சோழன், பரகேசரி வர்மராகிய குலோத்துங்க சோழன் மதுரையும் ஈழமும் கொண்டருளின இராச கேசரிவர்மனாகிய திரிபுவன சக்கரவர்த்தி இராஜாதிராஜ தேவன் இவர்களால் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இங்குள்ள மன்னர் சிலை விக்கிரம சோழன் அல்லது மூன்றாம் குலோத்துங்க சோழனாக இருக்கலாம். இங்குள்ள துர்க்கையின் இருபுறமும் இரண்டு வீரர்கள் தங்களை பலியிட்டு கொள்கின்றனர். பெருமாளுக்கு தனி சன்னதி உள்ளது
இராஜேந்திர.விக்ரமன்,சிதம்பரம்.






No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...