Sunday, August 11, 2019

மாணிக்க வாசகர் அவதார இல்லம் (திருக்கோயில்).

திருவாதவூரில் மணிக்கவாசகர் பிறந்த வீடு தான் கோயிலாக உள்ளது. திருவாதவூர் சிவன் கோயிலிலும் மாணிக்கவாசகருக்கு தனி சன்னதி உள்ளது.திருப்பெருந்துறை ஆத்மநாதர் கோயிலூம் சிதம்பரம் ஆத்மநாதர் கோயிலூம் மாணிக்கவாசகர் கட்டியதாக கூறுகின்றனர். பாண்டிய நாட்டில் திருவாதவூரில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாய் பிறந்தார் வாதவூரார்.வரகுண பாண்டியனிடம் அமைச்சராக பதவி வகித்து தென்னவன் பிரம்ம ராயன் எனும் பட்டம் பெற்றார்.பாண்டிய மன்னன் சோழ நாட்டிற்கு குதிரைகள் வாங்க மாணிக்க வாசகரை அனுப்பினார் அவர் போகும் வழியில் திருப்பெருந்துறையில் தங்கினார். அங்கு சிவபெருமான் குரு வடிவம் கொண்டு குருந்த மரத்தடியில் மாணிக்கவாசகருக்கு ஞான உபதேசம் செய்தார்.அவர் முழு சிவனடியாராக மாறினார். மாணிக்கவாகரை அழைத்து வர மன்னனிடம் இருந்து ஓலை வந்தது. அதை குரு வடிவம் கொண்ட இறைவன் படித்து ஆவணி மூலநாளில் குதிரைகள் வரும் என செய்தி அனுப்பினார்.ஆனால் குதிரைகள் வர வில்லை மன்னன் மாணிக்க வாசகருக்கு தொல்லைகள் கொடுத்தான்.இதை அறிந்த இறைவன் சிவகணங்களை வீரர்களாகவும் நரிகளை குதிரைகாளாக மாற்றி அதற்கு தானே தலைவனாக சென்று மன்னனிடம் கொடுத்து பரிசு வாங்கி சென்றார்.மன்னன் மாணிக்க வாசகரை பாராட்டினான்.அன்று இரவு குதிரைகள் எல்லாம் நரிகளாக மாறி அங்கிருந்த மற்ற குதிரைகளை கடித்து குதறி சென்றன. இதை அறிந்த மன்னன் மாணிக்கவாசகரை வைகையாற்றில் சுடு மணலில் நிறுத்தினான். இறைவன் கங்கையை வைகையில் பெருக்கெடுத்து வர செய்தார்.வெள்ளம் ஊருக்கு வராமல்் இருக்க வீட்டிற்கு ஒரு இளைஞன் வந்து கரையை அடைக்க மன்னன் ஆணையிட்டான்.அங்கு பிட்டு விக்கும் கிழவி தன் வீட்டில் யாரும் இல்லையே என கவலை கொள்ள அங்கு இறைவன் ஒரு இளைஞன் வடிவில் வந்து கிழவியிடம் நான் கரையை அடைக்கட்டுமா கேட்டார் கிழவி சரி அதற்கு கூலியாக பிட்டு மட்டுமே தருவேன் என்றாள்.பிட்டையெல்லாம் வாங்கி சாப்பிட்டு ஒரு மரத்தடியில் தூங்கினான் இறைவன்.அங்கு கரையை அனைவரும் அடைத்து கிழவியின் பக்கம் அடைக்காமல் ஓட்டைலயில் தண்ணீர் வந்தது இதை கண்ட மன்னன் மரத்தடியில் தூங்கிய இறைவனை பிரம்பால் அடித்தான். எழுந்த இறைவன் ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட உடனே அடைத்து கொண்டது.இறைவன் மறைந்தான்.ஆனால் மன்னன் அடித்த பிரம்படி அனைத்து உயிர்கள் மீதும் பட்டது.வானத்திலிருந்து இறைவன் அசரீரியாக மன்னா நான் வாதவூராகாக தான் திருவிளையாடல் புரிந்தோம் என்றான்.மன்னன் பணிந்து வணங்கி மாணிக்கவாசகரை முன்புபோல் அமைச்சர் பதவிக்கு அழைத்தான்.அவற்றை மறுத்து பல சிவத்தலங்களுக்கு சென்று இறுதியாக சிதம்பரம் வந்தார் அங்கு ஒரு இலங்கை மன்னனின் ஊமை மகளைப் பேச வைத்து பெளத்தர்களை வாதில் வென்றார்.சிவபெருமான் ஒரு வேதியர் வடிவில் வந்து மாணிக்கவாசகரிடம் சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவை பிரபந்தம் பாட வேண்டினார்.அவர் திருக்கோவையும்,திருவாசகம் பாட அதை இறைவன் எழுதி அம்பலவாணன் என கையொப்பமிட்டு சிற்றம்பலத்தில் வைத்து மறைந்தார்.மாணிக்க வாசகரிடம் திருவாசகத்தின் பொருள் என்ன என்று தில்லை வாழ் அந்தணரும் பிறரும் கேட்டனர் அதற்கு அனைவரையும் சிற்றம்பலத்திற்கு அழைத்து வந்து திருவாசகத்திற்கு பொருள் நடராஜ பெருமானை காண்பித்து அங்கு மறைந்தார்.இதை மாணிக்க வாசகர் வரலாற்றில் விரிவாக காணலாம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.


No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...