Sunday, August 4, 2019

இராஜராஜ சோழன் கோழிப்போர்

ராஜராஜசோழன் கோழிப்போர் சண்டையில்  வெற்றி பெறவும் ஊத்தை அட்டாமல் இருக்கவும் (உடலில் ஊனம் ஏற்படாமல் இருக்க) அவனது அதிகாரிகளும் பிறரும் தஞ்சை பெரிய கோயிலில் அளித்த நிபந்தங்கள்.
"உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் குடுத்த கால்மாட்டிலுங் குடுத்தார் குடுத்த கால்மாட்டிலுங் காசும் அக்கமுங் குடுத்து முதலான கால் மாட்டிலுங்ந் திருவிளக்குக்கு அடுத்தபடி கல்லில் வெட்டின"
"பெருந்தரம் மாராயன் ராஜராஜந் தன்னை உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் கோழிப்போரில் ஊத்தை அட்டாமல் என்று கடவ திருவிளக்குக்கு வைத்த காசில் குடுத்த காசு எட்டினால் காசு ஒன்றினுக்கு ஆடு மூன்றாக ஆடு இருபத்துநாலும்."
"வில்லவன் மூவேந்தவேளான் தன்னை உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் கோழிப்போரில் ஊத்தை அட்டாமல் என்று கடவ திருவிளக்குக்கு வைத்தகாசில்"
"சேநாபதி குரவன் உலகளந்தனான ராஜராஜமஹாராஜந் தன்னை உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் கோழிப்போரில் ஊத்தை அட்டாமல் என்று கடவ திருவிளக்குக்கு தந்த பசு"
இராஜராஜ சோழன் மேலை சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்று கைப்பற்றி வந்த பொருளை கொண்டு பொற்பூக்கள் செய்து இராசராசேச்சர பரம சுவாமிக்கு ஸ்ரீ பாத புஷ்பமாக இட்டு வழிப்பட்டுள்ளான்.
"ஸத்யாச்ரயனை எறிந்து எழுந்தருளி ஸ்ரீ பாத புஷ்பமாக அட்டித் திருவடிதொழுதன: திரு பொற்பூ ஒன்று பொன் ஒன்பதின் கழஞ்சேய் முக்காலே நாலு மஞ்சாடியுங் குன்றியாக பன்னிரண்டு னாற் பொன் நூற்று ஒரு பத்து ஒன்பதின் கழஞ்சரையே நாலு மஞ்சாடி"
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...