Friday, July 19, 2019

பூம்புகார் படகுத்துறை கி.மு.3 ஆம் நூற்றாண்டு

பூம்புகாரில் 1963ல்நடந்த தொல்லியல் அகழாய்வில் திரு.கே.வி.ராமன் தலைமையில் கீழையூரில் கி.மு.3ஆம் நூற்றாண்டு படகுத்துறையை கண்டு பிடிதுள்ளனர்.1995ல் திரு.நடன காசிநாதன் தலைமையில் மணிகிராமத்தில் கி.மு 3ஆம் நூற்றாண்டு படகுத்துறையை கண்டுபிடித்துள்ளனர். படகுத்துறையை சுற்றி மரகம்பம் படகுகளை கட்ட நடப்பட்டிருந்தன அவற்றின் மீது ரசாயன கலவை ஊற்றி கார்பன் சோதனையில் அவற்றின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என கண்டறிந்தனர். பண்டைய காவிரியாறு பூம்புகார் வடக்கு பக்கம் உள்ள இந்த படகுத்துறை வழியாக சென்று நெய்தவாசல் எனும் இடத்தில் கடலில் கலந்துள்ளது.தற்போது நெய்தவாசல் கடல்கரையிலிருந்து கடல் உள்ளே 5 கி.மி வரை இந்த காவிரி ஆறு சென்று கடலில் கலந்துள்ளது.அந்த கடற்கரையில் தான் கட்டிடங்களும் கோயில்களும் எழுப்பியுள்ளனர். அங்கு தான் காமவேள் கோட்டம் சோமகுண்டம் சூரியகுண்டம் இரு குளங்கள் இருந்தன. பெளத்த விகாரைகளும் இருந்துள்ளன. லாட வடிவ பெளத்த விகரை கடலின் உள்ளே கண்டுப்பித்துள்ளனர். மணிமேகலை காலத்தில் தான் கடல் 5 கி.மி உள்ளே வந்துள்ளது. மருவூர்பாக்கம் முழுவதும் அழிந்தன.  பண்டைய காவிரியாற்று தடயத்தை கடலின் உள்ளே கண்டறிந்துள்ளனர்.   கடலில் வணிக பொருட்களை எற்றி வந்த கப்பலிருந்து  படகுகள் மூலம் இந்த படகுத்துறைகளில் பொருட்களை இறக்கியும் எற்றியும்  சென்றுள்ளது. இப்படத்துறைகளில் வரிசையாக படகுகள் கட்டப்பட்டிருந்த காட்சியைப் பட்டினப்பாலை கட்டுத்தறியில் குதிரைகள் பிணைக்கப்பட்டிருப்பது போல இருந்தது என கூறுகின்றது. சதாசிவப்பண்டாரத்தார் கூறிய பூம்புகார் பரப்பளவு ஊர்கள் வரைபடம்  கொடுத்துள்ளேன் அவற்றில் பழைய காவிரியாறு ஓடிய பகுதியை காணலாம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...