Tuesday, May 28, 2019

திருவதிகை காமக்கோட்டம் எனும் பெரியநாயகி அம்மன் கோயில்

இக்கோயிலைக் கட்டியவர் முதற் குலோத்துங்சோழன் விக்கிரம சோழன் இவர்களின் படைத் தலைவராய் இருந்த  மணவிற்  கூத்த காலிங்கராயன் ஆவான்.இவன் இக்கோயிலைக் கட்டிய செய்தி இக்கோயிலில் பொறிக்கப் பெற்றுள்ள,

``அருமறைமா தாவி னறக்காமக் கோட்டந்
திருவதிகைக் கேயமையச் செய்து - பெருவிபவங்
கண்டா னெதிர்ந்தா ரவியத்தன் கைவேலைக்
கொண்டானந் தொண்டையர் கோ.``
என்னும் வெண்பாவால் விளங்கும்.

 இக்கோயிலைப் பொன் வேய்ந்தவர் மேற்குறித்த கூத்தர் காலிங்கராயர் ஆவர். இச்செய்தியை,

``தென்னதிகை வீரட்டஞ் செம்பொனால் வேய்ந்திமையோ
பொன்னுலகை மீளப் புதுக்கினான் - மன்னுணங்கு
முற்றத்தான் முற்றுநீர் வையம் பொதுக்கடிந்த
கொற்றத்தான் தொண்டையர் கோ.

என்னும் வெண்பாவால் அறியலாம் மணவிற் கூத்த காலிங்கரயன் திருவதிகை கோயிலில் செய்த வேறு திருப்பணிகள்:  நூற்றுக்கால் மண்டபத்தை கட்டினான். மடைப்பள்ளி மண்டபம் மாளிகை,பெரிய திருச்சுற்று மாளிகை, யாக மண்டபம் இவைகளைக் கட்டினான்.இரண்டு குளங்களையும் வெட்டினான். பத்தாயிரம் பாக்கு மரங்கள் கொண்ட தோப்பினை இக்கோயிலுக்காக உருவாக்கினான்.நந்தவனம் அமைத்து விளக்கெரிக்க பசுக்களை தானம் செய்துள்ளான். பொன், வெள்ளி பாத்திரங்களை இக்கோவிலுக்கு அளித்துள்ளான்.மணவிற் கூத்த காலிங்கராயன் இக்கோயிலில் செய்துள்ள திருப்பணி மகத்தானது ஆகும். இரா.விக்ரமன்,சிதம்பரம்.


No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...