Thursday, May 2, 2019

சிதம்பரம் இளைமையாக்கினார் கோயில்

திருநீலகண்ட நாயனாரும்,கணம்புல்ல நாயனாரும் வாழ்ந்து முக்தி பெற்ற கோயில்.சிவபெருமான் திருநீலகண்டரையும்  அவரது மனைவியையும் குளத்தில் முழ்க செய்து முதுமை கோலத்தில் இருந்து இளைமை கோலத்திற்கு மாற்றியதால் இளைமையாக்கினார் கோயில் என பெயர் பெற்றது.கணம்புல்ல நாயனார் கணம்புல்லை விற்று விளக்கேற்றும் பணி செய்து வந்தார்.ஒருநாள் புல்லை விற்க முடியாமல் நெய் வாங்க பணம் இல்லை அன்று அந்த புல்லை விளக்காக எற்றினார் அவை சீக்கிரம் அனைந்து விட்டதால் தன் தலை முடியை திரியாக திரித்து அதில் தீயை மூட்டி விளக்காக எறியவைத்தார். இதை  கண்ட சிவபெருமான் பார்வதி தேவியோடு இடப வாகனத்தில் வந்து அவரை காப்பாற்றி முக்தியளித்தார். இக்கோயில் முதலில்  புலிக்கால் முனிவரால் லிங்கம் அமைத்து வழிபட்டது.இறைவன் திருப்புலீஸ்வரர் அம்மன் திரிபுரசுந்தரி. இக்கோயில் திருப்புலீஸ்வரம் என அழைக்கப்பட்டது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...