Saturday, May 11, 2019

சிதம்பரம் கல்யாண சுந்தரர் வீரபத்திர சுவாமி கோயில்

வீரபத்திரர் அழகாக அமர்ந்த  கோலத்தில் காட்சி தருகிறார் அம்மன் கதம்பவன வாகினி சன்னதி தெற்கு நோக்கி அமைந்திருக்கின்றது.இந்த கோயிலை இராஜேந்திர சோழன் கட்டியதாக கூறுகிறார்கள்.கோயிலின் வெளியே வணங்கும் மன்னரின் உருவம் இராஜேந்திர சோழன் என கூறுகின்றனர்.ஆனால் அந்த சிற்பம் நடராஜர் கோயில் கீழை கோபுரத்தில் உள்ள கோப்பெருஞ்சிங்கன் போல  உள்ளது ஆனால் வயிறு பெரிதாக இல்லை.கோயிலை சுற்றி சிதைந்த கல்வெட்டுகள் உள்ளன.பல சிற்பங்களும் உள்ளன. கருங்கல் சுவர்களும் சிதறிக் கிடக்கின்றன. இந்த வீரபத்திரர் திருமண வரம் தருபவராக இருப்பதால் கல்யாண சுந்தர வீரபத்திரர் என அழைக்கப்படுகிறார்.திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வேண்டுகிறார்கள்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...