Wednesday, April 10, 2019

சிதம்பரம் நடராஜர் கோயில் நூறுகால் மண்டபம்

முதல் குலோத்துங்க சோழன் விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் படைத் தலைவராய்  விளங்கிய  மணவிற் கூத்த காலிங்கராயன் இந்த நூறுகால் மண்டபத்தை கட்டி அதில் உள்ள பலத் தூண்களில் விக்கிரம சோழன் பெயரை பொறித்துள்ளான்.இது விக்கிரம சோழன் திருமண்டபம் என அழைக்கப்பட்டது.இவன் தில்லை திருபணி மகத்தானதாகும்.இவன் கூத்தபிரானை வணங்கும் உருவம் இந்த மண்டபத்தில் கீழே உள்ளது. முதலாம் சடையவர்ம சுந்தர பாண்டியன் ஆட்சியில் அரச பிரதிநிதியாக  இருந்து ஆட்சி செய்த வீரப்பாண்டியன் என்பவன் இந்த மண்டபத்தில் வீராஅபிடேகமும் விஜயபிடேகமும் செய்து கொண்டு இந்த மண்டபத்தை வீரபாண்டியன் திருமண்டபம் என மாற்றி அதை தெற்கு வாயிலில் பொறித்துள்ளான். இதன் அருகில் தன் குல தெய்வமான மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தை கட்டியுள்ளான்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.



No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...