Friday, May 17, 2019

சிதம்பரம் நடராஜர் கோயில் மேற்கு கோபுரம்.


இந்த கோபுரம் கி.பி.1251முதல் 1268வரை ஆட்சி செய்த முதல் சடையவர்ம சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது. இது சுந்தரபாண்டியன் திருநிலை எழு கோபுரம் என கல்வெட்டில் கூறப்படுகிறது.இவன் நடராஜர் கோயிலிலும் ஸ்ரீரங்கம் கோயிலிலும் பொன் வேய்ந்துள்ளான். அதனால் இவன் பொன்வேய்ந்த பெருமாள் என அழைக்கப்பட்டான். நடராஜ பெருமானை வணங்கி பல துலாபார தானங்கள் செய்தான்.இவன் பெயரில் சுந்தர பாண்டியன் திருத்தோப்பு,சுந்தர பாண்டியன் தெங்கு திருவீதி அமைந்திருந்தன.இவன் திருப்பணி செய்த கோயில்களில் தனது படிமங்களை அமைத்துள்ளான்.இக்கோபுரத்தில்  வணங்கும் நிலையில்  இவனது சிற்பம் உள்ளது.இச்சிற்பம் அருகில் மற்றொரு சிற்பம் இவனது அமைச்சராகவோ அல்லது தலைமை சிற்பியாக இருக்கலாம்.இவனது வாழ்த்துப்பா
"வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன் வாழ்க மண்டலம் யாவையுங் கொண்டவன்
வாழ்க சுந்தர மன்னவன் தென்னனே" என்பதாகும்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.





No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...