இக்கோயில் ஆதி காலத்தில் மரத்தினால் அமைந்திருந்தன. சிற்சபையும் கனக சபையும் மரக்கட்டிங்களாக இருந்தன.கனக சபை பொற்றகடு வேயப்பட்டிருந்தன. ஊர்த்துவதாண்டவ மூர்த்தி எழுந்தருளியுள்ள நிருத்த சபை முற்காலத்தில் மரக்கட்டிமாக இருந்து பின்பு அதே அமைப்பை மாற்றாமல் கருங்கல் கட்டிடமாக அமைத்தனர். இக்கட்டிடங்கள் பௌத்த விகாரையின் அமைப்பை போன்று 'சாலாகார' விமான முள்ளனவாக இருக்கின்றன இந்த அமைப்பு பௌத்தச் சார்பானது. இதே அமைப்பைக் கொண்டதது தான் மாமல்லபுரத்தில் உள்ள 'பீம ரதம்' என்னும் சாலாகார விமானக் கட்டிடமாகும்.சிதம்பரம் கோயில் பௌத்த சார்புடையது என்பதை முதலாம் வரகுணப் பாண்டியன் காலத்தில் வாழ்ந்த மாணிக்க வாசகர் வரலாற்றில் அவர் சிதம்பரத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து வென்றார் என்றும் தோல்வியுற்ற பௌத்த பிக்குகள் சிதம்பரத்தை விட்டு இலங்கைக்கு போய்விட்டார்கள் என்றும் வரலாறு கூறுகிறது.சிதம்பரத்தில் அக்காலத்தில் பௌத்தர்கள் இருந்தார்கள் என்பதையும் அவர்களின் பௌத்த விகாரைகள் இருந்தன என்றும் தெரிகிறது. பௌத்தருடைய கட்டிடக்கலை அமைப்பு இக்கோயிலிலும் ஏற்பட்டிருகிறது.சிதம்பரத்தில் ஜைனர்களும் இருந்துள்ளனர்.ஜைனர் தெருவும் இருந்துள்ளது.ஆனால் பௌத்தர்கள் ஆதிக்கம் தான் அப்போது அதிகமாக இருந்துள்ளது. என நா.மு.வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடுகிறார்.
Saturday, December 15, 2018
சிதம்பரம் நடராஜர் கோயில் சபையும் சாலாகார விமானமும்.
இக்கோயில் ஆதி காலத்தில் மரத்தினால் அமைந்திருந்தன. சிற்சபையும் கனக சபையும் மரக்கட்டிங்களாக இருந்தன.கனக சபை பொற்றகடு வேயப்பட்டிருந்தன. ஊர்த்துவதாண்டவ மூர்த்தி எழுந்தருளியுள்ள நிருத்த சபை முற்காலத்தில் மரக்கட்டிமாக இருந்து பின்பு அதே அமைப்பை மாற்றாமல் கருங்கல் கட்டிடமாக அமைத்தனர். இக்கட்டிடங்கள் பௌத்த விகாரையின் அமைப்பை போன்று 'சாலாகார' விமான முள்ளனவாக இருக்கின்றன இந்த அமைப்பு பௌத்தச் சார்பானது. இதே அமைப்பைக் கொண்டதது தான் மாமல்லபுரத்தில் உள்ள 'பீம ரதம்' என்னும் சாலாகார விமானக் கட்டிடமாகும்.சிதம்பரம் கோயில் பௌத்த சார்புடையது என்பதை முதலாம் வரகுணப் பாண்டியன் காலத்தில் வாழ்ந்த மாணிக்க வாசகர் வரலாற்றில் அவர் சிதம்பரத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து வென்றார் என்றும் தோல்வியுற்ற பௌத்த பிக்குகள் சிதம்பரத்தை விட்டு இலங்கைக்கு போய்விட்டார்கள் என்றும் வரலாறு கூறுகிறது.சிதம்பரத்தில் அக்காலத்தில் பௌத்தர்கள் இருந்தார்கள் என்பதையும் அவர்களின் பௌத்த விகாரைகள் இருந்தன என்றும் தெரிகிறது. பௌத்தருடைய கட்டிடக்கலை அமைப்பு இக்கோயிலிலும் ஏற்பட்டிருகிறது.சிதம்பரத்தில் ஜைனர்களும் இருந்துள்ளனர்.ஜைனர் தெருவும் இருந்துள்ளது.ஆனால் பௌத்தர்கள் ஆதிக்கம் தான் அப்போது அதிகமாக இருந்துள்ளது. என நா.மு.வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
தில்லையில் புலிக்கால் முனிவரும், ஆதிசேஷன் எனும் பதஞ்சலி முனிவரும் தவம் செய்து நடராஜர் சிவகாம சுந்தரி திருநடன காட்சியை கண்டனர். இமயமலைக்கு த...


No comments:
Post a Comment