Sunday, October 23, 2022

திருப்புறம்பயம் பள்ளிப்படை கோயில் உண்மை வரலாறு

தமிழில் முதன்முதலில் பிற்கால சோழர் சரித்திரம் நூலை எழுதிய தி.வை.சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் இந்த திருப்புறம்பயத்தில் பிறந்தவர் ஆவார்.இந்த பள்ளிப்படை கோயிலை கண்டறிந்தவர். திருப்புறம்பியம் போர் திருப்புறம்பய கொள்ளிடகரையில் பல்லவன் அபராசிதவர்மனுக்கும், பாண்டியன் இரண்டாம் வரகுணனுக்கும் கி.பி.885இல் நடந்தது. இதில் ஆதித்த சோழன், கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி ஆகியோர் பல்லவருடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்து போரிட்டனர் பாண்டியன் வரகுண வர்மன் தோற்றான். கங்க மன்னன் பிருதிவிபதி இப்போரில் இறந்தான். அபராசிதவர்ம பல்லவனும் ஆதித்த சோழனும் வெற்றி பெற்றனர்.ஆதித்த சோழனுக்கு சோழநாடு முழுவதையும் ஆளும் உரிமை கிடைத்தது.இப்போர் இங்கு நடைபெற்றது என இதற்கு ஆதரமாக சதாசிவ பண்டாரத்தார் இப்போரில் இறந்த கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியின் நடுகற்கோயிலையும் உதிரப்பட்டி என்ற நிலப்பகுதியையும் கண்டறிந்து கூறினார். மேலும் கச்சியாண்டவன் என்ற நடுகற்கோயிலும் போர் நிகழ்ந்த இடம் என்று கருதப்படும் பறந்தலை என்னும் அவ்வூரில் காணப்படுகிறது என்கிறார். கச்சியாண்டவன் கோயில் என்பது போரில் இறந்த பல்லவ மன்னன் ஒருவன் நடுகற் கோயில் என அவ்விடத்தையும் சதாசிவ பண்டாரத்தார் கண்டறிந்து கூறினார். இவர் எழுதிய பிற்கால சோழர் சரித்திரம் நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலை எழுதியுள்ளார் அவற்றில் இந்த பள்ளிப்படை கோயில் பற்றி அந்நாவலில் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...