Wednesday, October 5, 2022

கம்போச நாட்டு மன்னன் காட்சியாக காட்டின கல்லு

முதல் குலோத்துங்க சோழன் தங்கையார் இராஜராஜன் குந்தையார் குந்தவை ஆழ்வார் என்பார், தில்லைச் சிற்றம்பலப் பெருமானுக்கு தண்ணீர் அமுது செய்தருளுதற்கென ஐம்பதின் கழஞ்சு நிறையுள்ள பொன்வட்டிலைத் தில்லைப் பெருங்கோயிலுக்கு வழங்கியுள்ளார். மேலும் அக்கல்வெட்டில் "ஸ்ரீ இராசேந்திர சோழ தேவர்க்குக் காம்போஜராஜன் காட்சியாகக் காட்டின கல்லு இது - உடையார் இராசேந்திர சோழ தேவர் திருவாய் மொழிந்தருளி உடையார் திருச்சிற்றம்பலமுடையார் கோயிலில் முன் வைத்தது - இந்தக் கல்லு திருவெதிரம்பலத்துத் திருக்கல் சரத்தில் திருமுன் பத்திக்கு மேலைப் பத்தியிலே வைத்தது" முதல் குலோத்துங்க சோழனுக்கு கம்போஜ நாட்டு மன்னன் தனக்கு காட்சி பொருளாக காட்டின கல்லொன்றை பெற்று வந்து தில்லை சிற்றம்பலத்தை சார்ந்துள்ள திருவெதிரம்பலத்தில் வைத்தான் என சிதம்பரம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.கம்போச நாட்டு தென்பகுதியை ஆண்ட ஹர்ஷவர்மனே நம் குலோத்துங்க சோழனுக்கு நணன்பனாக இருக்க வேண்டும் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் கடாரம் தேசம் போல கம்போச நாடும் சோழ இராச்சியத்தோடு நட்புரிமை கொண்டு வணிகத் தொடர்புடையதாக இருந்திருக்க வேண்டும் என சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். எதிர்அம்பலம் என்பது சிற்றம்பலத்தை ஒற்றியுற்ற கனகசபையாக இருக்க வேண்டும். இரா.விக்ரமன்,சிதம்பரம். பிற்கால சோழர் சரித்திரம் தி.வை.சதாசிவ பண்டாரத்தார்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...