Sunday, October 31, 2021
ஆவி உனக்கு அமுது எனக்கு ஆவுடையார் கோயில்
இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் உண்பதில்லை அதில் மணம் ஆவியை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்.ஆனால் ஒரு கோயிலில் இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவனே சாப்பிட்டு கொண்டு இருந்தார்.மாணிக்கவாசகர் காலத்தில் ஆவுடையார் கோயிலில் இறைவன் சிவபெருமான் தினமும் தனக்கு படைக்கும் உணவுகள் அனைத்தையும் சாப்பிட்டு விட்டு வெறும் பாத்திரங்களை போட்டு விடுவார்.அடியார்களும் பக்தர்களும் தினமும் பிரசாதம் கிடைக்கவில்லையே என வருந்தினர் இதை அறிந்த மாணிக்க வாசகர் இறைவனிடம் ஐய்யனே தங்களுக்கு படைக்கும் உணகளின் ஆவி மணம் மட்டுமே ஏற்றுக் கொண்டு உணவை எங்களுக்கு அளிக்கும்படி கருணை காட்டுங்கள் என வேண்ட இறைவனும் சரி அதில் உள்ள ஆவியை யாம் ஏற்றுக்கொண்டு அமுதை உங்களுக்கு அளிக்கிறேன் என்றார்.ஆவி உனக்கு அமுது எனக்கு.ஆவிடையார் கோயில் கோயிலில் புழுங்கல் அரிசி சாதத்தை சுடசுட ஆவி பறக்க பாகற்காய் கூட்டுடன் ஆவியை நைவேத்தியமாக படைக்கின்றனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Friday, October 29, 2021
திருமுதுகுன்றம் விருத்தாசலம் செம்பியன் மாதேவி திருப்பணி
திருமுதுகுன்றம் விருத்தாசலம் பழமலைநாதர் கோயில் செம்பியன் மாதேவியாரால் உத்தம சோழன் யஉ ஆண்டு கற்றளி ஆக்கபப்பட்டது.
"ஸ்வஸ்ரீ கோப்பரசேசரி வர்மக்கு யாண்டு 11 ஆவது ஸ்ரீபராந்தகதேவரான பெரிய சோழகனார் மகனார் கண்டராதித்த தேவர் தேவியார் மழபெருமானடிகள் மகளார் ஸ்ரீஉத்தம சோழர் தங்களாச்சி செம்பியன் மாதேவியார் எடுக்கப்பட்டது இந்த ஸ்ரீகோயிலும் ஸ்நான மண்டபமும் கோபுரமும் சுற்றாலையும் பரிவாரக் கோயில்களும் எடுக்கப்பட்டன இத்தேவர்க்கு உடையபிராட்டியார் குடுக்கப்பட்ட செப்பு விளக்கு ஐஞ்சு"
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Posts (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...