Sunday, March 21, 2021

பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்

முதல் சிலை பல்லவன் மகேந்திர வர்மன்(மஹேந்திர போத்ராதிராஜன்) ஆதிவராகர் குடைவரை கோயில் மாமல்லபுரம.இரண்டாவது சிலை மகேந்திர வர்மன் திருநாவுக்கரசரால் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியவுடன் திருப்பாதிரி புலியூரில் இருந்த சமணப் பள்ளிகளை இடித்து திருவதிகையில் தனது விருது பெயரான குணபரன் என்னும் குணபர ஈச்சுரத்தை எடுப்பித்தான்.இதை போல திருச்சிராப்பள்ளி மலையில்.சிரா எனும் முனிவர் வாழ்ந்த சமணப் பள்ளியை இடித்து சிவபெருமானுக்கு கோயில் எடுப்பித்தான். ‘லலிதாங்குர பல்லவேஸ்வரகிருகம்’ என இக்குடைவரைக் கோவில் அழைக்கப்படுகிறது.இங்குள்ள கங்காதர மூர்த்தி சிற்பத்தின் இடது புறம் உள்ள உருவம் இனி நான் சிவபெருமானுக்கு அடிமை என்பது போல மகேந்திர வர்மன் சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான்.என்பதை போல உள்ளது எனவும்.எனவே அது மகேந்திர வர்மன் சிலையாக இருக்கலாம் என்கின்றனர்.விக்ரமன் சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...