Monday, February 15, 2021

மும்முடிசோழ தலைக்கோலி வைத்த நுந்தா விளக்கு.

இராஜேந்திர சோழன் காலத்தில் சிறந்த நடனமாடி நாட்டிய கலையில் சிறந்து விளங்கி தலைக்கோலி பட்டம் பெற்ற ஸ்ரீஆரூர்த்தேவனார் மகள் நக்கன் பிரதமாதேவியாகிய மும்முடிசோழத் தலைக்கோலி உடையார் குடி அனந்தீசுவரத்து பரமசுவாமிக்கு ஒரு நுந்தா விளக்கு வைத்துள்ளாள். "ஸ்வஸ்ஸ்ரீ கோப்பரகேரி வர்மற்கு யாண்டு 11 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீவீரநாரயணசதுர்வேதி மங்கலத்து திருவனந்தீசுரத்து பரமசுவாமிக்கு ஸ்ரீஆரூர்த்தேவனார் மகள் பிரதமாதேவியாகிய மும்முடிசோழத் தலைக்கோலி வைத்த திருநொந்தா விளக்கு" (விக்ரமன்,சிதம்பரம்.)

No comments:

Post a Comment

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...