Saturday, April 18, 2020

திருவக்கரை வரதராஜ பெருமாள் கோயில்

திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் உள்ளே இருக்கும் சிறிய கோயில் வரதராஜப் பெருமாள் கோயிலாகும்.கி.பி 3 ஆம் நூற்றாண்டில் கொச்செங்கண்ணனால் எடுக்கப்பட்ட செங்கல் கோயிலாகும்.இதை அதிராஜேந்திரன் 2ஆம் ஆண்டு ஆட்சியில் உடையார்  அதிராஜேந்திர தேவர்ற்கு ராஜேந்திர சோழவளநாட்டு பனையூர் நாட்டு பொய்யாக்கம் குடிப்பள்ளி குமாரி செந்தனான ஜயகொண்ட சோழ விழுப்பரைய நாடாழ்வன் என்பவன் இக்கோயிலை கற்றளியாக எடுத்துள்ளான். இங்கு முதல் குலோத்துங்க சோழன் ஆட்சியில் விளக்கெரிக்க நிலம் அளித்துள்ளனர்.அவனது மெய்க்கீர்த்தியும் உள்ளது.விக்கிரம சோழன் ஆட்சியில் நுந்தாவிளக்கும், சந்திவிளக்கெரிக்க 12 ஆடுகளை குலக்கிழவன் ஆட்டரையன் திருநாடுடையவன் என்பவன் கொடுத்துள்ளான்.கல்வெட்டுகளில் இக்கோயில் பெருமாள் திருவக்கரை ஆழ்வார் என அழைக்கபடுகிறார். இவையனைத்தும் தென்னிந்திய கல்வெட்டு தொகுதிலிருந்து நானே தொகுத்து எழுதியுள்ளேன்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...