Tuesday, April 21, 2020

இராஜேந்திர சோழனை இளமையில் வளர்த்தவர்கள்

இராஜேந்திர சோழன் தன் தந்தையைப்  போல் சிவநெறியையே தனக்குரிய சமயமாக கொண்டவன். இவன் தன் வாழ்நாளில் சிவபெருமானிடத்தில் ஒப்பற்ற பக்தியுடையவனாய்த் திகழ்ந்தனன் என்பது இவன் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்தில் கற்றளியாக எடுப்பித்த ஈடும் ஏடுப்புமற்ற சிவாலயம்  ஒன்றினால் நன்கறியப்படும்.இவன், அவ்வாறு சிவபக்திச் செல்வமுடையவனாய் விளங்கியமைக்கு காரணம் இவன் கொள்ளுப்பாட்டி செம்பியன் மாதேவியும் இவனது அத்தை குந்தவை பிராட்டியாரும் இவனை இளமையில் வளர்த்து வந்தமையேயாகும்.ஒருவன் தன் இளமைப் பருவத்தில் எய்திய சிறந்த பயிற்சியும் பண்பும் அவன் வாழ்நாள் முழுவதும் நிலைபெற்றுப் பயன்படும் என்பது யாவரும் அறிந்த உண்மையேயாகும். இவ்வேந்தன் தன் ஆட்சியில் 8ஆம் ஆண்டாகிய கி.பி.1020-ல் செம்பியன் மாதேவியாரின் படிமம் ஒன்று செய்வித்து அதனை செம்பியன்மாதேவி எனும் ஊரில் உள்ள கோயிலில் எழுந்தருளவித்து அதன் நாள் வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ள செயல் ஒன்றே, இவன் சிவபக்திமிக்க அவ்வம்மையாரிடத்தில் எத்துணை அன்பும் மதிப்பும் வைத்திருந்தான் என்பதை இனிது புலப்படுத்துவதாகும்.இவனை போலவே இவன் தந்தை இராஜராஜ சோழனையும் வளத்தவர்கள் செம்பியன் மாதேவியும்,குந்தவையும் ஆகும்.
*பிற்கால சோழர் வரலாறு, தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...