Sunday, April 26, 2020

திரிபுவன வீரேச்சுரம் திருபுவனம்

பூமியின் நான்கு திசைகளையும் வெற்றி கொண்ட திரிபுவன வீரன்(மூன்றாம் குலோத்துங்க சோழன்) இவ்வூரையே இருப்பிடமாக கொண்டு அநேகப் பிரகார மாளிகைகள்,பற்பல வீதிகள் ஆகியவற்றுடன், சூரிய கதிரையே தடுக்கக் கூடியதாக வான வீதியை முட்டும் படி உயர்ந்த விமானத்துடன் பொன்மயமாக அழகு பெறத் திரிபுவன வீரேச்சுரம் என்னும் இத்திருக் கோயிலை எடுப்பித்தான்.

ஸ்ரீகண்டம்பு என்பவருடைய குமாரரும், தன்னுடைய குருவும் ஆன ஈசுரசிவர் என்னும் சோமேசுரரைக் கொண்டு இவ்வுலகத்துக்கே அம்மையப்பராக விளங்கும் பரமசிவன் பார்வதி ஆகிய இருவரையும் மிகச் சிறந்த முறையில் 'பாண்டியாரி'(மூன்றாம் குலோத்துங்க சோழன்)என்ற இவ்வரசன் பிரதிஷ்டை செய்தான்.
பிற்கால சோழர் வரலாறு தி.வை.சதாசிவப்பண்டாரத்தார்.
(இக்கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்க சோழன் சிலையின் புகைப்படம் சதாசிவப்பண்டாரத்தார் எடுத்ததாகும்.)

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...