Saturday, April 11, 2020

முன்னோர்களின் கல்வெட்டுகளை பாதுகாத்தல் திருமழப்பாடி கோயில்

திருமழபாடி சேரர்களின் கிளைப்பிரிவினர் வாழும் பகுதியாகும். அவர்கள் மழவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.இக்கோயில் ஆதித்தன் சோழன் காலத்தில் எடுக்கப்பட்டது.இக்கோயில் விமானத்தை புதுப்பித்து பழைய கல்வெட்டுகளை படியெடுத்து மீண்டும் வெட்டும்படி இராஜராஜ சோழன் 28ஆம் ஆட்சி ஆண்டில் ஆணையிடுகிறான்.அதை இராஜேந்திர சோழன் புதுப்பித்து 14 ஆம் ஆண்டு ஆட்சியில் அதை கல்லில் வெட்ட ஆணையிடுகிறான். "திருமழுவாடி உடையார் ஸ்ரீராசராச தேவர் அருளிச் செய்த திருக்கற்றளி எடுக்க ஸ்ரீவிமானம் வாங்கி(இடிக்க) ஸ்ரீவிமானத்துள்ள கல்வெட்டுப்படி பொத்தகத்தில் சேர்ப்பிக்க"
"ஆக இவ்வனைவர் கண்காணியாலும் இவ்வனைவர் கணக்கினாலும் கல்வெட்டுவித்தபடி முன்பு கல்வெட்டுச் சேர்ந்த பொத்தகப்படி"
இராஜேந்திர சோழன் புதுப்பித்து வெட்டிய முதல் கல்வெட்டு "முன்பு திருமழப்பாடி உடையார் கோயிலில் ஸ்ரீவிமானம் வாங்கி(இடித்து)ச் செய்கிறபோது ஸ்ரீவிமானத்தில் இருந்த கல்வெட்டுக்க்களை கற்படி மாற்றுச் செய்த புத்தகப்படியே திரும்பவும் கல்வெட்டுக"
முன்னோர்களின் கல்வெட்டுகளை பாதுகாக்க அன்றே அவற்றை நடைமுறை படித்தினர்.இக்கோயில் கல்வெட்டுகளை ஓலை சுவடியில் படியெடுத்து அவற்றை கோயில் புதுப்பித்த பின்பு மீண்டும் கல்லில் வெட்டினர். செம்பியன் மாதேவியும் இப்பணியை முன்னரே செய்துள்ளார்  திருகோடிகா கோயில்.இந்த தந்தை மகன் ஆணையிட்டதை இவர்களின் படைத்தலைவர்கான கிருஷ்ணன் ராமன் மும்முடிச்சோழன் பிரம்மராயனும் இவன் மகன் மாராயன் அருண்மொழியான உத்தமசோழ பிரம்மராயனும் திருப்பணி செய்து இந்த தந்தை மகன் நிறைவேற்றினர்.மேலும் சிறப்பு செய்திகள் இராஜேந்திர சோழன் சக்கரவர்த்தி பட்டம் பெற்றிருந்தான். இவன் பிறந்த திருவாதிரை நட்சத்திரம் மாதம்தோறும் விழா கொண்டாடினர். இவன் மனைவியருள்  வானவன்மாதேவி என்பவர்.இவன் மகள் பெயர் அருமொழி நங்கையாரன பிரான்.இவன் முதல் மகன் இராஜாதிராஜ சோழன் தராதலம் படைத்த ஜெயகொண்ட சோழனென்றும்,மதியெழு கோவிராஜ கேசரி வர்மரான உடையார் ஸ்ரீ ராஜாதி ராஜ தேவர் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. சோழர்களின் குல தெய்வம் நடராஜ பெருமானே என்று விக்கிர சோழன் மெய்க்கீர்த்தியில் இங்கு குறிக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் செம்பியன்மாதேவி பேரேரி உள்ளது.திருஞானசம்பந்தர்,அப்பர்,சுந்தரரால் பாடல் பெற்ற தலம்.
இறைவன்:வைத்திய நாதர்.
இறைவி:சுந்தராம்பிகை.  சுந்தரர், திரு வாலம்பொழிலில் இருந்த போது .மழபாடி இறைவன், அவரது கனவில் தோன்றி, `மழபாடிக்கு வர மறந்தனையோ`` என்று கூற, உடனே சுந்தரர் ``பொன்னார் மேனியனே`` என்று தொடங்கும் பதிகம் பாடி வழிபட்ட கோயில் இது. இவரது பாடல் படியே இக்கோயில் பொன்னர் திருமேனியை செப்புத்தராவால் எழுந்தருளுவித்தவன் உடையார் இராஜேந்திர சோழதேவர் அணுக்கியார் ஐயாறன்செம்பொன் நங்கைக் கூத்தன் உத்தம சீலியார் மகனார் சிறுதனப் பெருந்தரம் சேனாதிபதி அரையான் கடாரங் கொண்ட சோழன் இராஜராஜ அணிமுரி நாடாழ்வான் ஆவான்.இவன் இரண்டாம் இராஜேந்திரன் படைத்தலைவன் ஆவான். இன்னும் பல மன்னர்கள் மற்றும் கோயிலில் திருமேனிகளை எழுந்தருள வித்தவர்கள் என பல கல்வெட்டுகள் உள்ளன.இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...