Friday, March 25, 2022

முதல் குந்தவை தேவி

"ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி வர்மற்கு யாண்டு 19ஆவது தென்கரை திரைமூர்நாட்டு தேவதானம் திருவிடைமருதில் மூலதானத்துப் பெருமானடிகளுக்கு... நம்பிராட்டியார் கோக்கிழான் அடிகள் ... வாட்டி குந்தவை தேவி வைத்த திருநொந்த விளக்கினுக்கு எரிக்க வைத்த பொன் முப்பதின் கழஞ்சு.." யார் இந்த குந்தவை இவள் கோக்கிழானடிகளுக்கு என்ன உறவுமுறை மருமகளா? அரிஞ்சயன் மனைவி வீமன் குந்தவையாக இருக்கலாமோ கி.பி. 918 பராந்தக சோழன் மகள் வீரமாதேவிக்கு திருமணம் செய்து வைத்தார் கி.பி.925 மகன் அரிஞ்சய சோழனுக்கும் திருமணம் ஆகியிருக்கும் அல்லவா. எதுவனாலும் முதல் குந்தவை எனும் சோழ அரசி வீமன் குந்தவையாகவே இருக்க வேண்டும். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Sunday, March 20, 2022

சோழ மண்டல காவிரி ஆறு

கி.பி.16 ஆம் நூற்றாண்டில் அச்சுதேவ மகாராயர் ஆட்சியிலும் சோழன் கொண்டு வந்த காவிரி ஆறு சோழமண்டல காவிரியாறு என அழைக்கப்பட்டது.

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...