திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் திருவதிகையில் வீரட்டானேஸ்வரர் கோயிலில் சிவத்தொண்டு புரிந்து வந்தார்.அவர் காலத்தில் இக்கோயில் சிறிய செங்கல் கோயிலாக புதர் மண்டி இருந்தது. இதன் உள்ளே ஒரு சிவலிங்கம் மட்டும் இருந்தது.திலகவதியார் இக்கோயிலை சுத்தம் செய்து சாணம் கொண்டு மெழுகி கோலம் இட்டு இக்கோயிலின் எதிரே நந்தவனம் அமைத்து அதிலிருந்து பூக்களைப் பறித்து இறைவனுக்கு சாற்றி பூசை செய்தார். திலகவதியார் இக்கோயில் இறைவனை வேண்டி திருநாவுக்கரசற்கு சூலை நோயை ஆட்கொள்ள செய்து சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றினார்.தமிழகத்திலேயே முதன் முதலாக 'கூற்றாயினவாறு' எனத் தொடங்கும் முதல் தேவாரப் பதிகத்தை திருநாவுக்கரசு இங்கு தான் பாடினார். முதல் தேவாரப் பாடல் பெற்றத் தலமும் திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலாகும்.திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான இந்த திலகவதியார் நந்தவனம் சரியாக பராமரிக்க படததால் 2016இல் கோயிலின் உள்ளேயே புதிய நந்தவனம் அமைத்து அதிலிருந்து பூக்களைப் பறித்து இறைவனுக்கு பூசை செய்கின்றனர். திலகவதியார் வரலாற்றை விரிவாக காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் பிறந்த இல்லம்.இந்த இல்லம் ஸ்ரீ காஞ்சி காமக்கோடி பீடம் மடத்திடம் உள்ளது. வேத சிவாகம திருமுறை ...
No comments:
Post a Comment