திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் திருவதிகையில் வீரட்டானேஸ்வரர் கோயிலில் சிவத்தொண்டு புரிந்து வந்தார்.அவர் காலத்தில் இக்கோயில் சிறிய செங்கல் கோயிலாக புதர் மண்டி இருந்தது. இதன் உள்ளே ஒரு சிவலிங்கம் மட்டும் இருந்தது.திலகவதியார் இக்கோயிலை சுத்தம் செய்து சாணம் கொண்டு மெழுகி கோலம் இட்டு இக்கோயிலின் எதிரே நந்தவனம் அமைத்து அதிலிருந்து பூக்களைப் பறித்து இறைவனுக்கு சாற்றி பூசை செய்தார். திலகவதியார் இக்கோயில் இறைவனை வேண்டி திருநாவுக்கரசற்கு சூலை நோயை ஆட்கொள்ள செய்து சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றினார்.தமிழகத்திலேயே முதன் முதலாக 'கூற்றாயினவாறு' எனத் தொடங்கும் முதல் தேவாரப் பதிகத்தை திருநாவுக்கரசு இங்கு தான் பாடினார். முதல் தேவாரப் பாடல் பெற்றத் தலமும் திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலாகும்.திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான இந்த திலகவதியார் நந்தவனம் சரியாக பராமரிக்க படததால் 2016இல் கோயிலின் உள்ளேயே புதிய நந்தவனம் அமைத்து அதிலிருந்து பூக்களைப் பறித்து இறைவனுக்கு பூசை செய்கின்றனர். திலகவதியார் வரலாற்றை விரிவாக காணலாம்.
Subscribe to:
Posts (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்த...