Tuesday, November 16, 2021

ஆதித்த சோழனும் ராஜராஜன் சோழனும் பிறந்த சதயம்.

எள்ளு தாத்தா ஆதித்த சோழன் புரட்டாசி சதயம் எள்ளு பேரன் இராஜராஜ சோழன் ஐப்பசி சதயம் யாருக்கு தெரியும் சோழநாட்டை முழுவதும் கைப்பற்றி ஆட்சி செய்த இராஜகேசரி ஆதித்த சோழன் எனும் கோதண்ட ராமனோ மீண்டும் இராஜகேசரி இராஜராஜ சோழனாக பிறந்தனோ என்னவோ. பராந்தக சோழன் ஆட்சியிலும் சதயத் திருவிழா மாதந்தோறும் கொண்டாடப்பட்டது அது ஆதித்த சோழன் பிறந்த சதயத் திருவிழாவாகத் தான் இருக்க வேண்டும். ஸ்வஸ்ரீ மதுரை கொண்ட கோப்பரகேசரி பன்மர்ற்கு யாண்டு 37 ஆவது நாள் 10 திருவிடைமருதுடையார்......ற் குறும்பில் வாசுதேவனார் ஆராய்ச்சியில் திரைமூர் சபையாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் திருத்....தாரும் நாடக சாலையில் இருந்து திங்கள்ப் பெரும்பலி திருவாதிரை திருவிழாவுக்கும் சதயத் திருவிழாவுக்கும் அமாவாஸி திருவிழாக்கும் ஆகப் பெரும்பலி திங்கள் மூன்றினுக்கு திங்கள் எரியும் எண்ணை பதினை ஞாழியாக ஓராட்டை தொக்க எண்ணை நூற்றெண்பது நாழியாக நிவந்தம் செய்த..... இரா.விக்ரமன்,சிதம்பரம்.

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...